ஆப்நகரம்

சென்னை: 'உடல் ரீதியாக உறவு வைத்துக்கொண்டார்' - சின்னத்திரை நடிகை பகீர்

சின்னத்திரை நடிகையை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வாலிபர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Jan 2021, 6:39 pm
சென்னையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகையான சுவேதா (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த வருடம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் சுவேதா கூறியுள்ளதாவது, ''நான் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கீழ்கட்டளையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்தேன். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவதும், பொது இடங்களுக்கும் ஜோடியாக செல்வதுமாக இருந்தோம். இந்நிலையில் இருவருக்கும் கடந்த 2019 இல் நிச்சயதார்த்தம் நடந்தது.
Samayam Tamil rajesh


அப்போது ராஜேஷ் என்னை தொடர்பு கொண்டு, நட்சத்திர விடுதி ஒன்றில் ஈவண்ட் மேனேஜ்மேண்ட் நடத்தி வருவதாகவும், உடனடியாக அங்கு வருமாறு அழைத்தார். நானும் வருங்கால கணவர் என்ற முறையில் அழைத்த இடத்திற்கு சென்றேன். அங்கு நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ள போகிறோம் என்றும் அதனால் நாம் உறவு வைத்துக்கொள்வது தவறு இல்லை என்று ஆசை வார்த்தைகளை கூறி என் மூளையை சலவை செய்து உடல் ரீதியாக பாலியல் உறவு வைத்துக்கொண்டார்.


அதன்பின் ராஜேஷுடைய நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கியது. என்னிடம் பேசுவதையும், தொலைபேசியில் தொடர்பு கொள்வதையும் நிறுத்திக்கொண்டார். அவரை வற்புறுத்தி கேட்டபோது, ' உன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை என்றும் உன்னுடன் உறவு வைத்துக்கொண்ட பல புகைப்படங்களை ஆபாச இணையதளத்தில் வெளியிடப்போவதாகவு'ம் கூறினார். மேலும், என்னிடம் 10 லட்சம் ரூபாயை கேட்டும் மிரட்டினார் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

சித்ராவின் கணவர் மீது மேலும் ஒரு வழக்கு, சிறையில் இருந்தே சிக்கிய ஹேமந்த்!

ஆனால், அதுகுறித்து திருமங்கலம் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சுவேதா உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உடனே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. அதன்படி, திருமங்கலம் போலீசார் ராஜேஷ் மீது பாலியல் பலாத்காரம், மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், ராஜேஷின் வழக்கறிஞர் பத்மபாதன் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசியபோது, ராஜேஷும், நடிகையும் காதலித்து உண்மைதான். ஆனால், சுவேதாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததால் அதனை ராஜேஷ் கண்டித்தார். அதற்கு நான் அப்படிதான் இருப்பேன் என்று நடிகை கூறியதால் ராஜேஷ் அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். மேலும், ராஜேஷிடம் நடிகை பல லட்சம் வரை வாங்கிக்கொண்டு ஏமாற்றியுள்ளார். ஆனால், புகாரில் தன்னிடம் ராஜேஷ் பணம் கேட்டு மிரட்டுவதாக பொய் குற்றசாட்டு எழுப்பியிருக்கிறார் என்று கூறினார். ராஜேஷை பிடித்து விசாரித்த பின்னரே உண்மை என்னவென்று தெரியவரும்.

அடுத்த செய்தி