ஆப்நகரம்

ஆண் நண்பரை ஏவி கணவனை கொல்ல முயற்சி: தமிழ் சீரியல் நடிகை கைது..!

பொள்ளாச்சியில் கணவனை கொலை செய்ய முயற்சித்த சீரியல் நடிகையின் செயல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Mar 2023, 11:29 am
கோவையை சேர்ந்தவர் சீரியல் துணை நடிகை ரம்யா. இவர் தற்போது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணெதிரே தோன்றினாள், சுந்தரி ஆகிய சீரியலில் துணை நடிகையாக நடித்து வருகிறார். ரம்யாவுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சியை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
Samayam Tamil kovai crime news


ரமேஷ் அப்பகுதியில் உள்ள குளிர்பான கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து ரம்யா பீளமேட்டில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்நிலையில், ரம்யாவுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டு கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவரை அணுகியுள்ளார். அப்போது இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரம்யாவுக்கு குழந்தைகள் மீதான ஆர்வம் குறைந்துபோனது.

இதற்கிடையே, ரமேஷுக்கு குழந்தைகளை தனியாக பராமரிக்க முடியாமல் பீளமேடு சென்று ரம்யாவிடம் குழந்தைகளையும் தன் தாயும் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்போது ரம்யாவும் உடன்பட்டு கணவன் வீட்டுக்கு மீண்டும் வந்துள்ளார். இந்த நிலையில், ஆண் நண்பர் சந்திரசேகருக்கு போன் செய்த ரம்யா தன்னை ரமேஷ் குடித்துவிட்டு வந்து கொடுமை செய்வதாகவும் அவரை கொலை செய்ய வேண்டும் என்றும் சந்திரசேகரிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து, சம்பவம் நடந்த இரவு ரம்யாவும் ரமேஷும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழி மறித்த அடையாளம் தெரியாத நபர் ரமேஷை தாக்கி ஆக்ஷா பிளேடு மூலம் கழுத்து. தலை பகுதிகளை அறுத்துவிட்டு தப்பியுள்ளார். இதில் ரமேஷின் கை முறிந்து படுகாயமடைந்துள்ளார்.

இதனை அடுத்து ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணை நடத்திய போலீசார் ரமேஷுக்கு வந்த செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அதில், சந்திரசேகரின் மூலம் கொலை முயற்சி நடந்திருப்பது அதற்கு மூளையாக மனைவி ரம்யா செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, மனைவி ரம்யா மற்றும் சந்திரசேகரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவையில் பெருகி வரும் கொலை சம்பவங்களுக்கு மத்தியில் நண்பரை ஏவி துணை நடிகை கணவனை கொல்ல முயற்சித்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி