ஆப்நகரம்

பழனிக்கு வந்த கேரளா பெண் பலாத்காரம்: தீவிரமானது விசாரணை

பழனிக்கு வந்தபோது கேரள பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணையை முடுக்கியுள்ளார்.

Samayam Tamil 12 Jul 2021, 9:23 pm
கேரளாவைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பழனிக்கு வந்தபோது மூன்று நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து பழனியில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரௌவளிபிரியா பழனிக்கு வந்து நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Samayam Tamil பழனி காவல் நிலையம்


குற்றம் நடந்ததாக கூறப்படும் அடிவாரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர், பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அடுத்த கட்டமாக பழனி போலீசாரை கேரளாவிற்கு அனுப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பழனி காவல் நிலையத்தில் கண்கானிப்பாளர் வருகை காரணமாக ஏராளமான போலீசார் குவிந்துள்ளதால் காவல் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பழனிக்கு வந்த கேரளா பெண் கூட்டு பலாத்காரம்: லாட்ஜில் கணவன் முன்பு நடந்த கொடூரம்

முன்னதாக இதுகுறித்து புகார் கொடுத்த பெண் கண்ணூர் போலீசில் கூறியதாவது, '' கடந்த ஜூன் 19ம் தேதி நானும், கணவரும் பழனிக்கு சென்றோம். அங்குள்ள விடுதியில் தங்க முன்பதிவு செய்திருந்தோம். பழனி பேருந்து நிலையத்தில் இறங்கி விடுதியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, மூன்று பேர் என்னை பின்தொடர்ந்து வந்தனர்.

அப்போது என் கணவரை அடித்து விரட்டிவிட்டு, என்னை அங்குள்ள ஒரு விடுதியில் அடைத்து பூட்டினர். பின்னர் அன்று இரவு முழுவதும் மாறி மாறி என்னை பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து பழனி அடிவாரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றோம். ஆனால், எனது புகாரை போலீசார் ஏற்கவில்லை'' என குற்றஞ்சாட்டினார்.

அடுத்த செய்தி