ஆப்நகரம்

பலாத்காரத்தில் முடிந்த கண்ணாமூச்சி விளையாட்டு! 6 சிறுவர்கள் கைது...

திரிபுராவில் எட்டு வயது சிறுமியை விளையாட்டின்போது 7 சிறுவர்கள் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Samayam Tamil 1 Sep 2020, 8:00 pm
மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள தபாரியாவில் 8 வயதான சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அப்பகுதியில் உள்ள 6 சிறுவர்கள் கண்ணாம்பூச்சி விளையாடுவதற்காக அந்த சிறுமியை அழைத்துள்ளனர். அதன்பேரில், அவர்களுடன் விளையாட சென்ற சிறுமியை விளையாட்டில் சேர்த்துக்கொண்டனர்.
Samayam Tamil file pic


பின்னர், தங்களை கண்டுபிடி என்று கூறிவிட்டு இருட்டான பகுதிக்கு சிறுவர்கள் சென்றுவிட, சிறுமியும் ஆள் இல்லாத இடங்களில் சென்று தேடி பார்த்துள்ளார். அப்போது, சிறுமியை சத்தம்போடக்கூடாதென கூறி மிரட்டிய சிறுவர்கள் 6 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்பு வீட்டுக்கு வந்த சிறுமி நடந்தவற்றை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே நியூ கேபிடல் காம்ப்ளெக்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

குழந்தையை கொன்று தாய் தூக்கிலிட்டு தற்கொலை! கோவையில் துயரச் சம்பவம்

அதன் பேரில் ஆறு சிறுவர்களை கைது செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.அதில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முகாமில் சேர்க்கப்பட்டனர். எஞ்சிய நான்கு பேர் சிறார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான ஒரு சிறுவனை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி