ஆப்நகரம்

தமிழகத்தில் அடுத்த கொடுமை..! ஏழு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

புதுக்கோட்டை அருகே ஏழு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Jul 2020, 4:01 pm
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள எம்பல் கிராமத்தைச் சேர்ந்த நாகூரான் - செல்வி தம்பதிக்கு 7 வயதில் மகள் இருந்துள்ளார். இந்நிலையில், சிறுமி கடந்த ஜூன் 30 ஆம் தேதியன்று வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார் . இதையடுத்து , சிறுமியை அக்கம் பக்கத்தில் தேடிய பெற்றோர் பின்னர் எம்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Samayam Tamil jayapriya murder


இந்நிலையில், காணாமல் போன சிறுமி அதற்கு மறுநாள் நாகூரனின் வீட்டிற்கு அருகிலுள்ள குட்டையில் சடலமாக கிடப்பதை கண்டறிந்தனர். அதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பிரேத பரிசோதனையில், சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. கொலை தொடர்பாக சிறுமியின் வீட்டருகில் வசித்து வரும் வாலிபரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சிறுமியின் கொலையில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதென மேற்படி விசாரணை நடந்து வருகிறது.

பேய் ஓட்ட வந்த பெண்ணை மயக்கமாக்கி சாமியார் செய்த அட்டூழியம்..!

தமிழகத்தில் கொரோனா தாக்கத்துக்கு நடுவே சாத்தன்குளம் தந்தை , மகன் உயிரிழப்பு விவகாரம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி