ஆப்நகரம்

காட்டுப் புற்களுக்கு வைக்கப்பட்ட தீயில் கருகிய 17 ஆட்டுக்குட்டிகள்..! விருதுநகரில் சோகம்...

விருதுநகர் அருகே பட்டமங்கலம் கிராமத்தில் வயல்களில் காட்டுப் புற்களுக்கு வைக்கப்பட்ட தீயில் சிக்கி 17 ஆட்டுக்குட்டிகள் உடல் கருகி பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Apr 2020, 9:13 pm
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்சாமி. இவர் கடந்த 3 வருடங்களாக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே இராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வயல் பகுதியில் ஆட்டுக் கிடை அமைத்து ஆடுகள் மேய்த்து வந்துள்ளார்.
Samayam Tamil ஆட்டுக்குட்டிகள் file pic


இந்நிலையில், இன்று வழக்கம் போல பால்சாமி ஆடுகளை மேய்க்க சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஆட்டுக் கிடையில் 17 ஆட்டுக்குட்டிகள் மட்டும் இருந்துள்ளன.

இந்நிலையில் வயல்களில் காட்டுப் புற்களுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டுச் சென்றுள்ளனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மளமளவென பரவிய தீயில் சிக்கி, ஆட்டுக் கிடையில் இருந்த 17 ஆட்டுக்குட்டிகளும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.

குமரியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி சாப்பிட்ட மூவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்...

தற்போது, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் நடைபெற்ற இச்சம்பவம் பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நரிக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி