ஆப்நகரம்

வயலில் ஓடியாடிய சிறுமி, கை, கால்களை கட்டி சீரழிப்பு..! அப்படியே கிடந்த சடலம்

உபி அருகே 17 வயது சிறுமியின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 16 Oct 2020, 4:40 pm
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் வட மாநிலங்களை மட்டுமல்லாமல் இந்திய முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதே பாணியில் உபியை சுற்றி அரங்கேறி வரும் சிறுமிகள் கொலை சம்பவங்கள் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை கொடுக்கிறது.
Samayam Tamil file pic


உத்தரப் பிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் ( மாற்று பெயர் ). இவருக்கு 17 வயதில் மகள் இருந்துளளர். இவர்களுக்கு சொந்தமாகா விவசாய நிலமும் உள்ளது. அதில் பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று சுரேஷ் தொழிற்சாலை வேலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் இரவில் வீடு திரும்பியபோது, தனது மகள் வீட்டில் இல்லை. அக்கம்பக்கத்தில் கேட்டபோது, சிறுமி மாலை வேளையில் பயிர் அறுக்க சென்றதாக கூறியுள்ளனர். இதையடுத்து கையில் டார்ச்சுடன் வயலுக்கு சென்று மகளை தேடியுள்ளார் சுரேஷ். அப்போது, வயலுக்கு நடுவே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், வாயில் சட்டையை திணித்தபடி சடலமாக கிடந்துள்ளார் சிறுமி. உடனே இதுகுறித்து கிராமத்தினர் பரபங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

உன் வயிற்றில் எங்கள் வாரிசா? கர்ப்பமான சிறுமியை துரத்தியடித்த குடும்பம்! வேலூர்

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் ரத்த காயங்கள் இல்லாத நிலையில், சிறுமி மூச்சடக்கி கொல்லப்பட்டார் என்றும் அதற்கு முன்னதாக பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார் என்றும் சிறுமியின் தந்தை போலீசில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், பிரேத பரிசோதனை வந்த பிறகே சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யபட்டாரா என்பது தெரிய வரும். குற்றவாளிகளை விரைவில் பிடிபடுவர் என தெரிவித்தனர்.

அடுத்த செய்தி