ஆப்நகரம்

டவுன்லோடு செய்து டிவிடி போட்டு விற்பனை; ஆபாச பட விவகாரத்தில் சிக்கிய திருச்சி நபர்கள்!

ஆபாச வீடியோக்களை டவுன்லோடு செய்து விற்பனை செய்ததாக இருவரை திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 27 Jan 2020, 12:17 pm
தமிழகத்தில் ஆபாச பட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் சிறார் ஆபாச படங்கள் பார்ப்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Samayam Tamil Arrest


நாடு முழுவதும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. டெல்லி நிர்பயா சம்பவம் விஸ்வரூபம் எடுத்த பிறகு பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஃப்ரீ டோல்கேட் இதுதான் - அடிச்சு காலி பண்ணிய மக்கள்; ஜாலியா செல்லும் வாகனங்கள்!

ஆனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் ஒரு குற்றம் நடந்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் சிறார் ஆபாச படங்கள் வைத்திருப்பவர்கள், பிறரிடம் பகிர்ந்து கொள்பவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சிறார் ஆபாச படங்களை பகிர்ந்த குற்றத்திற்காக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் தென்னூரை சேர்ந்த காதர் பாட்ஷா, விமான நிலையம் பகுதியை சேர்ந்த அப்துல்லா ஆகியோரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

அசாம் இளைஞர் எப்படி சிக்கினார்?- சிவகாசி சிறுமி கொடூர கொலையில் வெளியான அதிர்ச்சி!

இவர்கள் ஆபாச வீடியோக்களை டவுன்லோடு செய்து பென் டிரைவ், டிவிடிக்கள் மூலம் விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்திருக்கின்றனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய முகமது அஷ்ரப், ரியாஜூதீன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி