ஆப்நகரம்

வேலூரில் ஓரின சேர்க்கைக்கு மறுத்த வாலிபர் படுகொலை: 2 பேர் கைது

வேலுர் மாவட்டத்தில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட வழக்கில் இளைஞரை கொலை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Samayam Tamil 15 Jul 2019, 9:22 am
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஓரினச் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil murder


வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். வயது 20 இவர் வாடஸ் ஆப் குரூப் மூலம் நாட்றம்பள்ளியை சேர்ந்த பாலாஜி(23),கார்த்திக்(22) இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 13ஆம் தேதிஅன்று நாட்றம்பள்ளிக்கு வர சொல்லி கார்த்திக், ஆனந்துக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

நண்பரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றபோது ஆனந்தை ஓரின சேர்கையில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர். இதனை மறுத்த காரணத்தினால் கார்த்திக் மற்றும் பாலாஜி ஆனந்தை கொலை செய்து பச்சூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்று உள்ளனர்.

இதனையடுத்து பிரேதத்தை கைப்பற்றிய ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் முதலில் தற்கொலையாக இருக்கலாம் என விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆனந்த் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஆனந்துடைய செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் பாலாஜி மற்றும் கார்த்திக் இணைந்து இக்கொலையை செய்தது தெரிய வந்தது. எனவே இருவரையும் கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி