ஆப்நகரம்

பார்லருக்கு சென்ற பள்ளி மாணவிகளுக்கு அதிர்ச்சி... சக மாணவி உட்பட 3 பேர் மீது போக்சோ

சிவகங்கை அருகே பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த பெண் உட்பட 3 பேர் மீது போஸ்கோ வழக்குப்பதிவு 17 வயது பள்ளி மாணவியும் கைது

Samayam Tamil 16 Nov 2021, 3:32 pm
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவிகள் காரைக்குடி செக்காலை ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த சக மாணவியின் தாயார் பணிபுரிந்து வந்த அழகு நிலையத்திற்கு கண்புருவம் திருத்துவதற்காக சென்றுள்ளனர்.
Samayam Tamil கைதானவர்கள்


அப்போது அங்கு பணியில் இருந்த விக்னேஷ் மற்றும் மேற்குவங்க மாநிலம் டார்ஸிலிங்கை சேர்ந்த மன்ஸில் என்பவர்கள் பள்ளி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒரு மாணவி தனது தந்தையிடம் கூறியதை அடுத்து, அவர் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில், தேவகோட்டையை சேர்ந்த விக்னேஷ் (28), காரைக்குடியைச் சேர்ந்த லெட்சுமி (45) மற்றும் 17 வயது மாணவி மீது காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


என் பாட்டிக்கே நடந்துச்சிங்க... கோவை மாணவி மரணம்... மனம் திறந்தார் கஸ்தூரி

விசாரணைக்குப் பின் லெட்சுமி, விக்னேஷ் என்பவரையும் கைது செய்து அவர்கள் மீது போஸ்கோ வழக்கு பதிவு செய்யப்பட்டு காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மகேஸ்வரி விசாரணை செய்து வருகிறார். மேலும், தலைமறைவாக உள்ள டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் அதே பள்ளியை சேர்ந்த 6 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மாணவிகளின் பெற்றோர் புகார் கொடுக்க முன்வரவில்லை... பள்ளி மாணவிகளிடையே ஆசை வார்த்தை கூறி அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ளும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.

அடுத்த செய்தி