ஆப்நகரம்

பல பள்ளி மாணவர்களுடன், பல இடங்களில் உல்லாசம் - ஆசிரியை கைது!: சிக்கியது எப்படி?

திருவண்ணாமலை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் பல மாணவர்களுடன் உல்லாசமாக இருந்தது குறித்து, அவரது கணவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 21 Mar 2019, 5:44 pm
திருவண்ணாமலை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் பல மாணவர்களுடன் உல்லாசமாக இருந்தது குறித்து, அவரது கணவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.
Samayam Tamil pocso


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ் குமார். இவர் அரசு பள்ளி ஆசியராக பணியாற்றி வருகிறார். அதே போல் அவரது மனைவி நித்யாவும் ஆரணி அடுத்த பையூர் அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்தார்.

அதே பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார். இந்நிலையில் ஒரு மாணவருடன் அந்த ஆசிரியைக்கு தொடர்பு ஏற்பட்டு உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் நித்யா செங்கம் பகுதிக்கு பணி மாறுதல் அடைந்தார். அங்கும் ஒரு மாணவருடன் நெருக்கம் ஏற்பட்டு பல முறை உல்லாசமாக இருந்துள்ளார். இப்படி மாணவர்களுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த புகைப்படம், வீடியோக்களை நித்யா அவ்வப்போது பார்த்து ரசித்து வந்தார்.

போலீஸில் புகார்:
மனைவி நித்யாவின் வீடியோக்களை பார்த்து அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
இந்நிலையில் நித்யாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை திரட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகார் மனுவை விசாரித்த மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா மனுவை மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி விசாரிக்க கூறினார். இதையடுத்து நித்யா போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதனால் நித்யா ஆசிரியர் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட கல்வி இயக்குனர் உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி