ஆப்நகரம்

விழுப்புரத்தை அதிர வைத்த கொடூர கொலை; திருநங்கைக்கு இப்படியொரு பயங்கரமா...!

திருநங்கை ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 17 Jul 2019, 2:30 pm
விழுப்புரம் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கீரப்பாளையத்தை சேர்ந்தவர் அன்பு(36). இவர் தனக்குள் ஏற்பட்ட பெண் தன்மை காரணமாக அபிராமி என்ற பெண்ணாக மாறினார்.
Samayam Tamil Murder


தற்போது அய்யன்கோவில்பட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் இன்று காலை விழுப்புரம் - செஞ்சி கூட்ரோடு சாலையில், ரத்தக் காயங்களுடன் அபிராமி பிணமாக கிடந்துள்ளார்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also Read: முன்விரோதம் காரணமாக வாலிபர் கொலை- ராணுவர் வீரர் உள்பட 8 பேர் கைது!

இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருநங்கைகள் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், காரில் வந்த சில மர்ம நபர்கள் அபிராமி தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது.

Also Read: தாத்தாவின் நகையை திருடியதாக கொத்தனாரை கொலை செய்த சிறுவன்!

இதற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: திருப்பூர் அருகே இறுதிச் சடங்கு செய்ய பணம் கொடுத்துவிட்டு குடும்பமே தற்கொலை!

அடுத்த செய்தி