ஆப்நகரம்

சென்னை பைனான்சியரை ஓட ஓட வெட்டும் நபர்கள்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி...

சென்னை பைனான்சியர் கொலை செய்யப்பட்டபோது பதிவாகியுள்ள சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

Samayam Tamil 20 May 2022, 2:09 pm
சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (36). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி ஆறுமுகம் தனது ஊழியர் ரமேஷ் என்பவருடன் அமைந்தகரை அருகே அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களை இரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வழி மறித்து ஆறுமுகத்தை வெட்ட தொடங்கியது. பதறி போன ஆறுமுகம் சாலையில் இறங்கி தப்பியோட முயன்றார்.
Samayam Tamil financier murder case cctv


ஆனால், ஆறுமுகத்தை விடாமல் விரட்டி சென்ற கும்பல் பொதுமக்கள் மத்தியில் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆறுமுகத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அமைந்தகரை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


அதில், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த ஆறுமுகம் மீது ஏற்கனவே கொலை மற்றும் பெண் வன்கொடுமை உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. மேலும், ஆறுமுகம் கத்தியை காட்டி கணவன் கண்முன்னே ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்றும் அந்த வழக்கில் சிறைக்கு சென்று ஜாமினில் வெளிவந்தார் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகக்கூட ஆறுமுகத்தை பழிவாங்கும் நோக்கில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னை பைனான்சியர் கொலை: கோர்ட்டில் இருவர் சரண்..!

இதற்கிடையே, பைனான்சியர் ஆறுமுகத்தை கொலை செய்ததாக சந்திரசேகர் மற்றும் ரோஹித் ராஜ் ஆகிய இருவர் நேற்று கள்ளக்குறிச்சி குற்றவியல் விரைவு நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்னிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இது சம்மந்தமாக தொடர் விசாரணை நடந்து வரும் நிலையில், ஆறுமுகத்தை நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்க்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

அடுத்த செய்தி