ஆப்நகரம்

அரிவாளால் வெட்ட வந்த ரவுடி... கேரள இன்ஸ்பெக்டர் செய்த காரியம்.. பகீர் சிசிடிவி வீடியோ

கேரளாவில் தன்னை கொலை செய்ய வந்த ரவுடியை அடக்கி காவல் நிலையம் கொண்டு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 18 Jun 2022, 1:50 pm
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்ட காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் அருண்குமார் (37). இவர் சம்பவத்தன்று ஜீப்பில் ரோந்து பணியில் இருந்துள்ளார். அப்போது, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சுகுதன் என்ற ரவுடி சாலையோரம் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்ததை பார்த்த இன்ஸ்பெக்டர் அருண்குமார் அந்த ரவுடியை மடக்கி பிடிக்க ஜீப்பை விட்டு கீழே இறங்கியுள்ளார்.
Samayam Tamil kerala police cctv


உடனே சுதாரித்துக்கொண்ட ரவுடி சுகுதன் வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அருண்குமாரை வெட்டி கொலை செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் அருண்குமார் சுகதனின் தாக்குதலில் இருந்து லாவகமாக தப்பித்து அவனை கீழே தள்ளி கையில் இருந்த அரிவாளை பிடுங்கி காவலரிடம் ஒப்படைத்தார். இதை வேடிக்கை பார்த்திருந்த பொதுமக்களில் ஒருவர் ரவுடி சுகுதனை சரமாரியாக தாக்கினார்.

ஆனால், அவர்களிடம் இருந்து ரவுடியை மீட்ட இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றார். இன்ஸ்பெக்டர் நினைத்திருந்தால் தன்னை வெட்ட வந்த ரவுடியை தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டு இருக்கலாம். ஆனால், அவனது தாக்குதலில் இருந்து உயிர் தப்பியதுடன் குற்றவாளியை முறைப்படி காவல் நிலையம் அழைத்து சென்ற சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

போக்சோ வழக்கில் சிறைக்கு சென்ற காதலனை கரம் பிடித்த பெண்... மதுரையில் வியப்பு சம்பவம்

தமிழகத்தில் தொடர்ச்சியாக கஸ்டடி மரணங்கள் நிகழும் போது, குற்றவாளி தங்களை தாக்க வந்ததாகவும், கத்தியால் குத்த வந்ததாகவும் சில நேரங்களில் ஆதராமே இல்லாமல் போலீசார் அறிக்கை விடுகின்றனர். இந்நிலையில், போலீஸ் இன்ஸ்பெக்டரை கொலை வெறியில் வெட்ட வந்த ரவுடியை அடக்கி போலீஸ் ஜீப்பில் ஏற்றி சென்ற கேரள இன்ஸ்பெக்டரின் செயல் அவரது கண்ணியத்தையும், நிதானத்தையும் காட்டியுள்ளது. மேலும், இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி