ஆப்நகரம்

குறியீடு போட்டு கொள்ளையடிக்க வரும் வடமாநில ஆசாமிகள்; அதிர்ச்சி பின்னணி- எச்சரிக்கை ரிப்போர்ட்!

வடமாநில திருடர்கள் பொதுவாக சில ரகசிய குறியீடுகளைக் கொண்டு, தங்கள் கொள்ளைக்கான திட்டத்தை வகுக்கின்றனர். இதற்கான அர்த்தம் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 15 Aug 2019, 1:25 pm
தமிழகத்தில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. இதனை தமிழில் வெளியான “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Samayam Tamil Robbery TOI


நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட தற்போதைய சூழலிலும், மிகவும் சாமர்த்தியமாக கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். வடமாநில கொள்ளையர்கள் பொதுவாக சில ரகசிய குறியீடுகளை தங்களுக்குள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

Also Read: மகளை சீண்டிய கொடூரன்; தட்டிக் கேட்ட தந்தைக்கு இப்படியொரு பயங்கரம்- மனைவி கண்முன் அதிர்ச்சி!

முதலில் கொள்ளையடிக்க உகந்த பகுதிகள் எது என்பதை தேர்வு செய்கின்றனர். பின்னர் ஏதேனும் பொருட்கள் விற்பதைப் போல சென்று, அங்குள்ள வீடுகளின் நிலவரங்களை ஆராய்ந்து அறிந்து கொள்கின்றனர்.

அவ்வாறு செல்கையில், சம்பந்தப்பட்ட வீடுகளில் சில குறியீடுகளை விட்டுச் செல்கின்றனர். இது பின்னர் வரும் கொள்ளையர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த குறியீடுகளில் பல்வேறு ரகங்கள் உண்டு. அதாவது,

* ஆங்கில ’D' வடிவில் குறியீடு - உங்கள் வீட்டு சுவரில் போடப்பட்டிருந்தால், நுழைவதற்கு ஆபத்தானது என்று கொள்ளையர்கள் குறிப்பிட்டுள்ளதாக அர்த்தம்

Also Read: ரோட்டில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு: காதல் ஜோடி கைது!

* கீழ் நோக்கி கூரான குறியீடு - இந்த வீட்டில் கேமரா அலாரம் உள்ளது என்று அர்த்தமாம்

* சிதறிக் கிடக்கும் சிறிய கற்கள் - செழிப்பான வீடு என்றும், கொள்ளையடித்தால் நிறைய கிடைக்கும் என்றும் அர்த்தமாம்

* கீழ்நோக்கிய முக்கோணம், நடுவில் நேர்க்கோடு - பெண்கள் மட்டும் உள்ள வீடு என்று அர்த்தமாம்

Also Read: திருவள்ளூர் அருகே ஒரே இரவில் 3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி!

* ஒரு செவ்வகம், அதன் குறுக்கே கோடுகள் - ஆளில்லாத வீடு என்று அர்த்தமாம்

* வட்டம், குறுக்கே கோடுகள் - இந்த வீட்டில் எதுவும் தேறாது என்று அர்த்தமாம்.

இதுதொடர்பான பதிவை தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் இட்டுள்ளார். அதில், ”வெளிமாநில கொள்ளையர்களின் குறியீடு இது. உங்கள் வீட்டு சுவற்றில் இருந்தால் உடனே அழித்து விடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். எனவே பொதுமக்கள் இதனை உணர்ந்து, மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

அடுத்த செய்தி