ஆப்நகரம்

போலீஸ் விசாரணைக்கு பயந்து மோதிரங்களை கப்பென்று விழுங்கிய நபர்... திருப்பூரில் திக் சம்பவம்

போலீஸ் விசாரணைக்கு பயந்து மோதிரத்தை விழுங்கிய நபர் ஆபத்தான நிலையில் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Samayam Tamil 28 May 2022, 7:11 pm
திருப்பூர் அருகே வஞ்சிபாளையம் ரயில்வே மேம்பாலம் அருகே அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி காஜா (45), சதாம் உசேன், உதயகுமார் உள்பட 4 பேர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த காஜா, உதயகுமார் மற்றும் அவருடைய நண்பர் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து சதாம் உசேனை கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர்.
Samayam Tamil மாதிரி புகைப்படம்


இதில் படுகாயமடைந்த சதாம் உசேன் வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட காஜா, உதயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரை போலீசார் ஜீப்பில் ஏற்றி திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது காஜா போலீஸ் விசாரணைக்கு பயந்து திடீரென தான் அணிந்திருந்த 2 மோதிரங்களை கழற்றி விழுங்கினார்.

நெல்லையில் அ.ம.மு.க நிர்வாகி சரமாரியாக வெட்டி கொலை..!

சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி