ஆப்நகரம்

நான் இறந்த பிறகு தனுஷ் அருகே அடக்கம் செய்யுங்க... காதலன் இறந்ததால் காதலி தற்கொலை...

கர்நாடகா அருகே காதலன் சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் மனமுடைந்த காதலி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 May 2022, 11:00 am
தனது காதலனை அடக்கம் செய்த அருகே என்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என தற்கொலை செய்துகொண்ட பெண் எழுதியிருந்த உருக்கமான கடிதம்
Samayam Tamil shocking incident that a woman commits suicide following her lover dies in accident in karnataka
நான் இறந்த பிறகு தனுஷ் அருகே அடக்கம் செய்யுங்க... காதலன் இறந்ததால் காதலி தற்கொலை...


இப்படியொரு காதலா

கர்நாடக மாநிம் தும்கூரு அருகே உள்ள மஸ்க்கள் கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ். இவர் பெங்களூருவில் துணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரும் மஸ்க்கள் அருகே உள்ள ஆரஹள்ளி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணான சுஷ்மா என்பாரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். மேலும், இருவரும் உறவினர்கள் என்பதால் இரு குடும்பத்தினரும் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பரிதாப மரணம்

இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி தனுஷ் மஸ்க்கள் கிராமத்தில் நடந்த ஊர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பெங்களூருவில் இருந்து தனது காரில் வந்து கொண்டிருந்தார். பெங்களூருவுக்கு தும்கூரு தேசியநெடுஞ்சாலை நிலமங்களா அருகே தனுஷ் தன் காரை ஓட்டிச் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தனுஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காதலி தற்கொலை

இதனையடுத்து, சாலை விபத்தில் மரணமடைந்த தனுசை உறவினர்கள் அடக்கம் செய்தனர். இந்த நிலையில் தனுசை கடந்த 2 வருடங்களாக காதலித்த சுஷ்மா தன் காதலன் இறந்த சோகத்தில் மனமுடைந்து வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஷ மாத்திரைகள் சாப்பிட்ட சுஷ்மாவை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். சாலை விபத்தில் மரணமடைந்த தன் காதலனை மறக்க முடியாமல் விஷ மாத்திரைகள் சாப்பிட்டு காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இரு குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுஷ்மாவின் கோரிக்கை

மேலும், தற்கொலை செய்துகொண்ட சுஷ்மா கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அதில் காதலன் இறந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் , தான் இந்த பிறகு தனுஷ் அருகே அடக்கம் செய்யுமாறும் அந்த கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். சுஷ்மாவின் கோரிக்கைப்படி உறவினர்கள் மஸ்கல் கிராமத்தில் தனுசை அடக்கம் இடத்தின் அருகே சுஷ்மாவை அடக்கம் செய்தனர்.

ஒட்டுமொத்த கிராமமே அஞ்சலி

காதலன் உயிரிழந்த 4 நாட்களில் காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தும்கூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுஷிமாவின் உடலை அடக்கம் செய்த போது ஒட்டுமொத்த கிராமமே அங்கு ஒன்றுகூறி இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அடுத்த செய்தி