ஆப்நகரம்

வேலூர் நர்சிங் மாணவியின் தற்கொலைக்கு காரணம் பேராசிரியர்கள்.. அதிர்ச்சி தகவல்

வேலூர் நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 15 Aug 2022, 6:59 pm
வேலூர் மாவட்டம் குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரது மகள் கார்த்திகாதேவி (22). இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.
Samayam Tamil vellore student death case


இதனிடையே நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து இரவு தனது சொந்த ஊரான குடியாத்தம் வந்துள்ளார். பின்னர் அதிகாலை கார்த்திகாதேவி வீட்டில் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்யுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், ஆந்திராவில் படித்து வந்த கார்திகாதேவிக்கு கல்லூரி எச்ஓடி மற்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தது தெரிய வந்தது. இதனால், மாணவி சில நாட்களுக்கு முன்பு பெற்றோருக்கு போன் செய்துவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

டாஸ்மாக் விடுமுறை... இளம்பெண் அசுர போதை... கரூரில் அவலம்..!

இந்நிலையில்தான், மாணவி கடும் மன உளைச்சலில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. தமிழகத்தில் இருந்து படிப்பிற்காக வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவிகள் இதுபோன்ற தொந்தரவுகளை சந்தித்து வருவதாக குற்றசாட்டுகள் இருந்து வருகின்றன. ஆகையால், தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்தி வெளி மாநிலங்களில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மேலும், மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்த ஆந்திர கல்லூரி எச்ஓடி, பேராசிரியர்கள் மீது சித்தூருக்கு சென்று புகார் கொடுக்க மாணவியின் பெற்றோர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல... யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து மாநில சுகாதாரத் துறையின் உதவி எண்: 104 அல்லது 'சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.

அடுத்த செய்தி