ஆப்நகரம்

கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை, சித்ரவதை - 3 ஆண்டுகள் தாங்க முடியாத கொடூரம்!

போலீசார் எடுத்த மீட்பு நடவடிக்கையில் மூன்று ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் சித்ரவதை அடைந்துவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Samayam Tamil 13 Feb 2020, 2:12 pm
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் கஞ்சன்பூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்பு நடவடிக்கையில் களமிறங்கினர். இதில் பைரோசாபாத்தை சேர்ந்த பெண் மற்றும் அவளது இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
Samayam Tamil Rape No


அப்பெண் கடந்த மூன்று ஆண்டுகளாக இரண்டு முறை விற்கப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பெண் ஆக்ராவின் பாஹ் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜரார் பகுதியை சேர்ந்த ஆணை திருமணம் செய்து கொண்டார்.

இப்படியொரு அதிர்ச்சியா?- பாவம் குழந்தை; கொடூர மனம் படைத்த பெற்றோர் செய்த காரியம்!

இதையடுத்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த சூழலில் அவரது கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரால் ஏமாற்றப்பட்டு விற்கப்பட்டுள்ளார். பின்னர் தனியார் மருத்துவமனை உரிமையாளர், வளையல் நிறுவன உரிமையாளர் என மாறி, மாறி விற்கப்பட்டு இருக்கிறார்.

இந்த காலக்கட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சித்ரவதைகளுக்கு ஆளாகியுள்ளார். அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று அப்பெண் தனக்கு கிடைத்த செல்போன் மூலம் தனது தந்தையை அழைத்துள்ளார்.

அப்போது தான் இருக்கும் இடத்தையும், நடந்த விஷயங்கள் பற்றியும் கூறியுள்ளார். இதையடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் கஞ்சன்பூர் போலீசிடம் தெரிவித்துள்ளனர். உடனே விரைந்து சென்ற போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த பெண் மற்றும் அவரது 7 மாத குழந்தையை மீட்டனர்.

சிறார் ஆபாசப் படம்: வேட்டையில் சிக்கிய கருப்பு ஆடு - வச்சு செய்யும் நாமக்கல் போலீஸ்!

அவரிடம் நடத்திய விசாரணையை இரண்டு வயது மகள் குழந்தை திருமணத்திற்காக விற்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் அவரையும் தேடிக் கண்டுபிடித்து தாயிடம் ஒப்படைத்தனர். இவர் அளித்த புகாரின் அடிப்படையில் 9 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி