ஆப்நகரம்

நெற்றி பொட்டில் துப்பாக்கி; டெல்லியில் அதிகாலை நடந்த பயங்கரம் - அதிர்ச்சி வீடியோ!

தலைநகர் டெல்லியில் அதிகாலை வேளையில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Jul 2019, 4:54 pm
வடக்கு டெல்லியை சேர்ந்த தம்பதி, தங்கள் வாழ்நாளில் கண்டிராத அதிர்ச்சிகர சம்பவத்தை சந்தித்துள்ளனர். நேற்று அதிகாலை வேளையில், பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டு தங்கள் வீட்டிற்கு காரில் திரும்பினர்.
Samayam Tamil Delhi Robbery


காரில் இருந்து இறங்கிய வருண் பாஹல், வீட்டின் கதவை மூடச் சென்றுள்ளார். அப்போது முகமூடி அணிந்து கொண்டு, மூன்று பேர் வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கியுள்ளனர்.

அவர்கள் உள்ளே வராதீர்கள் என்று சொல்வதற்குள், துப்பாக்கியை எடுத்து மிரட்டியுள்ளனர். உடனே பயந்து போன வருண், உள்ளே வந்துள்ளார். அவர்களைப் பின் தொடர்ந்து வந்த கும்பல், காரில் மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருப்பதைக் கண்டனர்.

அவர்களிடம் இருந்த பணம், நகை உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டனர். இதற்கிடையில் தனது செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முயற்சித்தார். ஆனால் அதற்குள் திருடர்கள் செல்போனை பிடுங்கிக் கொண்டனர்.

இதையடுத்து தனது குழந்தைகளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு அமர்ந்துள்ளார். அவர்கள் அனைத்தையும் திருடிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி