ஆப்நகரம்

தணிக்காச்சலம் போலி சித்த மருத்துவராம், மருந்துலாம் இல்லையாம் போலீஸ் தகவல்...

சித்த மருத்துவர் எனத் தன்னை அடையாளப்படுத்தும் தணிகாச்சலம் போலி மருத்துவர் எனத் தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் கூறி வந்த நிலையில்...

Samayam Tamil 6 May 2020, 9:52 pm
தணிகாச்சலம் என்பவர் தன்னை சித்த மருத்துவர் என அடையாளப்படுத்திக் கொண்டு கடந்த சில காலமாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
Samayam Tamil கொரோனாவுக்கு மருந்து, சித்த மருத்துவர் சிறையில் அடைப்பு...
கொரோனாவுக்கு மருந்து, சித்த மருத்துவர் சிறையில் அடைப்பு...


இவர் வெளியிட்ட வீடியோக்களில் தன்னிடம் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாகவும், ஏன் அதை அரசு ஏற்க மறுக்கிறது என்றும் பேசி வந்தார்.

குறிப்பாக இவர் வெளியிட்ட வீடியோக்களில், கொரோனா சீனாவை தாக்கியவுடன் அந்நாட்டு அரசு அதிகாரிகள் தன்னை தொடர்பு கொண்டதாகவும், அதனால் அவர்களுக்கு மருந்து கொடுத்து உதவி செய்ததாகவும் கூறி வந்தார். சீனாவில் தணிக்காச்சலம் கொடுத்த மருந்தால்தான் அந்த நாடு கொரோனாவை விரட்டியது என்றும் கூறி வந்தார்.

மேலும் தணிகாச்சலம் "என்கிட்ட மருந்து இருக்குனு சொல்றேன். அப்படியிருந்தும் ஏன் இந்த அரசு என்ன கண்டுக்காம இருக்கு" என கேள்விகளையும் எழுப்பினார். இதுபோன்ற வீடியோக்களால் தணிக்காச்சலம் சமூக வலைத்தள பிரபலமானார்.

இதையடுத்து தணிக்காச்சலம் போலி சித்த மருத்துவர் எனத் தமிழ்நாடு சித்த மருத்துவர் சங்கம் அறிவித்தது. தொடர்ந்து தணிகாச்சலம் வதந்தி பரப்புவதாகச் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திலும் புகார் அளித்தது.

புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் தணிகாச்சலத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தணிகாச்சலத்தை சென்னை கமிஷ்னர் அலுவலகத்திற்கு மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் கொண்டு சென்றனர். அங்கு அதிகாரிகள் அவரிடம் 3 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஸ்கூல் பாய்ஸா இப்படி? அதிர்ச்சியூட்டும் ’பாய்ஸ் லாக்கர் ரூம்’ - களமிறங்கிய டெல்லி கிரைம் போலீஸ்!

விசாரணையில் தணிகாச்சலம் வெளியிட்ட அறிவிப்புகள் பொய் எனக் கண்டறியப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து விசாரணைக்குப்பின் தணிகாச்சலத்தை எழும்பூரில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பு பகுதிக்குக் கூட்டிச் சென்ற அதிகாரிகள், நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

அடுத்த செய்தி