ஆப்நகரம்

பாலியல் புகாரில் கைதான சிவசங்கருக்கு ஸ்டான்லியில் தீவிர சிகிச்சை..!

பாலியல் புகாரில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி

Samayam Tamil 24 Jul 2021, 2:35 pm
சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த மாணவிகள் பலரை பாலியல் சீண்டல் கொடுத்ததான புகாரில் அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
Samayam Tamil கோப்புப்படம்


அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் போலி சாமியார் சிவசங்கர் பாபாவை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே அவர் உடல்நல குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, சுஷில் ஹரி பள்ளியில் சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி அம்பிகா முன்பு வாக்குமூலத்திற்கு நிறுத்தப்பட்டனர்.

அதில் ஒரு மாணவி, '' என்னை மூன்று முறை பாபாவின் அறைக்கு அழைத்து சென்றார்கள். அங்கு வைத்து என் ஆடைகளை களைத்து துன்புறுத்தினார்கள் என்றும் கதறி அழுதும் என்னை விடவில்லை' என்று மாணவி தெரிவித்தார்.

செய்வாரா முதல்வர் ஸ்டாலின்? 60 வயதும், 2.5 லட்சம் காலிப் பணியிடங்களும்!

இதையடுத்து, சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்களை பிடித்து விசாரிக்க சிபிசிஐடி முயன்ற நிலையில், காயத்திரி, பிரவீனா உள்ளிட்ட 5 ஆசிரியைகள் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 5 வரை சிவசங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். முன்னதாக அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இரண்டு முறை உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி