ஆப்நகரம்

சென்னை பிரபல வங்கியில் மோசடி..! மூத்த மேலாளர் உள்ளிட்டோர் அதிரடி கைது

சென்னை அருகே வங்கி மோசடியில் ஈடுபட்டு வந்த மூத்த மேலாளர் உள்ளிட்டோரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 13 Dec 2020, 4:48 pm
சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது 'யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா' கிளை. இங்கு கிளை மேலாளராக பணியாற்றி வரும் மெக்டலின் என்பவர் வேப்பேரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், '' முகமது முஸாமில் (34) உள்ளிட்டோர் போலி ஆவணங்களை தயாரித்து ரூ 1 கோடியே 44 லட்சத்து 22 ஆயிரம் கார் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
Samayam Tamil bank scam


அந்த புகார் தொடர்பாக, சென்னை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, முஸாமில் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த சர்க்கரை பாண்டியன், ரவி, அய்யாதுரை ஆகியோரை பிடித்து விசாரித்து தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

சித்ரா ஆடை மாற்றிய பிறகு தான் தற்கொலை! செல்போன் பேச்சால் விபரீதம்

மேலும், வங்கி மூத்த மேலாளராக பணியாற்றி வந்த வெங்கட்ரமணன் பணத்துக்கு ஆசைப்பட்டு உரிய விதிமுறைகள் பின்பற்றாமல் கடன் வழங்கி வந்த விவகாரம் தெரிய வந்தது. இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் வெங்கட்ரமணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி