ஆப்நகரம்

தொழிலதிபர் வீட்டில் கைவரிசை; அதுவும் 120 பவுன் நகைகள் திருட்டு- சும்மா விடுமா போலீஸ்!

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 22 Sep 2019, 2:43 pm
சென்னையை அடுத்த நங்கநல்லூர் எஸ்.பி.ஐ காலணி விரிவு 2வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ரமேஷ்(52). இவர் கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.
Samayam Tamil Theft


இவர் ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்ததால், சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இவரது வீட்டில் மனைவி, பிள்ளைகள் மட்டும் இருந்துள்ளனர். இந்நிலையில் ரமேஷின் மனைவி மற்றும் பிள்ளைகள் வேறொரு வேலை காரணமாக, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டனர்.

உல்லாசமாக இருக்க வேண்டுமா.! போலீசுக்கே பாலியல் மெசேஜ்.. தனிப்படையில் சிக்கிய மசாஜ் சென்டர்..

இந்த சூழலில் நேற்று முன் தினம் இரவு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து, உடனே உள்ளே ஓடிச் சென்று பார்த்தனர்.

வீட்டின் பீரோவில் இருந்த 120 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது. இதில் தங்க, வைர, வெள்ளி பொருட்களும் அடங்கும். மேலும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

மகனுடன் சேர்ந்து மருமகளை கொடூரமாக தாக்கும் முன்னாள் நீதிபதி; அதிர வைக்கும் வீடியோ!!

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தென் சென்னை இணை ஆணையர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இதற்கான கைரேகை நிபுணர்கள் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். அருகிலுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வடமாநில இளைஞர்கள் சிலர் அப்பகுதியில் சந்தேகப்படும் படி, சுற்றி திரிந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பண ஆசையால் நோயாளிகளின் உயிருடன் விளையாடும் அரசு மருத்துவர்!

அவர்கள் ரமேஷின் வீட்டில் எகிறி குதித்து, பின்னர் நகைகளுடன் திரும்பி வரும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வடமாநில பவாரியா கொள்ளை கும்பலைச் சேர்ந்த 6 பேரை மும்பையில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது.

அடுத்த செய்தி