ஆப்நகரம்

மனைவிக்கு தகாத உறவு இருப்பதை தெரியாமலேயே உயிரை விட்ட கணவன், சென்னை துயரம்

சென்னை: கோடம்பாக்கத்தில் காதலனுடன் சேர்ந்து கணவனை துடிதுடிக்க கொலை செய்த மனைவி உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை.

Samayam Tamil 26 Feb 2021, 10:19 pm
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரை அவரது மனைவியே கூலிப்படை வைத்து கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை குறித்து க்ரைம் ரீவைண்டில் பார்க்கலாம்.
Samayam Tamil sanmuganathan and lokeshini


சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன். வழக்கறிஞரான இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி எடுத்து வந்தார். இவரது மனைவி லோகேஷினி. இந்த நிலையில் லோகேஷினிக்கும், சண்முகநாதன் என்பவருக்கும் இடையே திருமண உறவை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் முருகனுக்கு சாகும் வரை தெரியாமல் இருந்ததுதான் சோகத்தின் உச்சம். கணவனை கொன்றுவிட்டால் தகாத உறவை முறையாக நடத்தி கொள்ளலாம் என்ற ஆசையில் இருந்து வந்த லோகேஷினி, முருகனை கொலை செய்ய சண்முகநாதனிடம் கூறியுள்ளார்.

அதன்படி, கூலி படையுடன் தயாரான சண்முகநாதன் கடந்த 2016ஆம் ஆண்டு முருகனை கொலை செய்ய பின்தொடர்ந்தார். ஆனால், பொதுமக்கள் இடையூறாக இருந்ததால் கூலிப்படை பின்வாங்கி விட்டது. அன்று பதறி துடித்து வீட்டுக்கு வந்த முருகன் மனைவியுடம் தன்னை ஏதோ ஒரு கும்பல் கொள்ள முயற்சிப்பதாக தெரிவித்தார். ஆனால், எதையும் தெரியாததை போல இருந்த லோகேஷினி, அதெல்லாம் ஒன்றும் இல்லை சும்மா புலம்பிக்கொண்டு இருக்காதீங்க என்று கூறிவிட்டார்.

அதனையடுத்து கோடம்பாக்கத்தில் புதிதாக வீடு பார்த்து வாருங்கள் என்று கணவனை வெளியில் அனுப்பிய லோகேஷினி, உடனே சண்முகநாதனுக்கு போன் செய்து துப்பு கொடுத்துவிட்டார். அப்போது இருவரும் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோ பதிவில், '' என் கணவருக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. அவரை கொலை செய்யத்தான் யாரோ வருகிறார்கள் என்று அவருக்கு தெரிந்து விட்டது.

பெண்ணின் தற்கொலை முடிவால் பலியான இரு உயிர்கள், இப்படி ஒரு மரணம் வரக்கூடாது...

நீ இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட வேண்டாம். ஆட்களை ஏவி விட்டு தள்ளியே இரு. உனக்கு ஏதாவது ஆகினால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என லோகேஷினி கூறுகிறார். அதற்க்கு பதிலளிக்கும் சண்முகநாதன், செல்ல குட்டி நான் இதில் இன்வால்வ் ஆகல செல்லக்குட்டி. உனக்காதான் செல்லம் நான் இத செய்றேன். உன்னுடைய சந்தோசத்துக்குத்தான் நான் செய்றேன்'' என இவ்வாறு கூறினார்.

இந்நிலையில், கோடம்பாக்கம் அருகே புதிய வீடு பார்க்க சென்ற முருகனை சண்முகநாதனின் கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டது. இது தொடர்பாக லோகேஷினி, சண்முகநாதன், சுப்பிரமணி, முரளி, ஜஸ்டின் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அனைத்து சாட்சியங்களும் நிரூபிக்கப்பட்ட நிலையில், மேற்கண்ட 6 பேருக்கும் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி