ஆப்நகரம்

ஹத்ராஸ் மாவட்டத்தில் 6 வயது சிறுமி..! அடுத்த கொடூரம்

உத்தரப் பிரதேசத்தில் ஆறு வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Oct 2020, 2:33 pm
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான தலித் பெண் கூட்டு தாக்குதலால் பலியாகியுள்ள சம்பவத்தை கண்டித்து நாடளவில் போராட்டங்களும், கண்டனங்களும் எழுகின்றன. இந்த நிலையில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாநிலத்துக்கு பேரிடியை கொடுத்துள்ளது.
Samayam Tamil file pic


ஹத்ராஸை சேர்ந்த 6 வயது சிறுமி அலிகாரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது இந்த கொடூரம் நிக்ழ்ந்துள்ளது. அங்கிருந்த உறவுக்கார நபர் ஒருவர் 10 நாட்களுக்கு முன்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில், டெல்லி மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் சிறுமியின் உடலை சாலையில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பலாத்காரம் செய்த நபரையும், இந்த வழக்கில் குற்றவாளியை பிடிப்பதில் மெத்தனம் காட்டிய போலீசாரையும் கைது செய்யக்கோரி உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

'என்ன மன்னிச்சிடுங்க'... மேனேஜர் ஆபாச வலையில் சிக்கிய தொழிலதிபர் மனைவி..!

இதையடுத்து அலிகார் மூத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி இக்லாஸின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது ஹத்ராஸ் 19 வயதான பெண்ணின் வழக்கிற்கு பிறகு நடந்துள்ள மூன்றாவது சம்பவமாகும். அடுத்தடுத்து நிகழும் பாலியல் அட்டூழியங்கள் உபி மாநிலத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி