ஆப்நகரம்

சென்னை: ஊரடங்கால் வேலையிழந்து கஞ்சா விற்ற சாப்ட்வேர் எஞ்சினியர் கைது!

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சாப்ட்வெர் எஞ்சினியர் உட்பட 3 பேரை போலீசாரை கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 8 Sep 2020, 1:50 pm
சென்னை குரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவர் பிரபல ஐடி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்ததால், வருமானமின்றி கிடந்துள்ளார். இதனால் அடுத்த வேலை கிடைக்கும்வரை காலத்தை ஓட்ட நினைத்த சரண்ராஜ் கஞ்சா விற்பனையால் கிடைக்கும் கொள்ளை லாபம் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil saran raj


இதையடுத்து அவர் தனது நண்பர்களான மருந்து விற்பனை செய்து வந்த ஆலன் மற்றும் ஸ்டார் ஹோட்டல் ஊழியர் மனோஜ் ஆகியோருடன் சேர்ந்து ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கஞ்சாவை சப்ளை செய்யவதற்கு குரோம்பேட்டை நோக்கி சென்றபோது தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கப்பட்டார். அப்போது, அவருடைய வாகனத்தை சோதனையிட்டபோது சீட்டுக்கு அடியில் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரையும் ஆலன் மற்றும் மனோஜ் மூவரையும் போலீசார் கைது செய்ததோடு அவர்களது வீடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் ஒரு சில இடங்களில் கண்ணுக்கு தெரியாமல் விற்கப்பட்டு வந்த கஞ்சா பொட்டலங்கள் தற்போது வெளிப்படையாக விற்பனையை செய்யப்படுகிறது. கண்ணகி நகர் போன்ற சுனாமி குடியிருப்புகளில் கஞ்சா விற்பனை நடக்கும் என பல நாட்களாக காவல்துறையின் கூற்றாக இருந்து வந்தது. தற்போது ஐடி கம்பெனி வாசல்களிலும், அடுக்குமாடி குடியுறுப்புகளிலும் பரவலாக கஞ்சா வாசம் வீசத்தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை.

தென்காசி தொழிலதிபர் வீட்டில் துணிகரம்! மனைவியை கட்டிப்போட்டு கைவரிசை

கொரோனா ஊரடங்கில் ஐடி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாத சம்பளத்தை நம்பி டூ வீலர் முதல் வீட்டு லோன் வரைக்கும் ஈஎம்ஐ கட்டி வருபவர்கள் நிலையானது இப்படி மாற்று வழியில் சிந்திப்பதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றாலும், படித்தவர்களின் நிலைமை இப்படியா செல்வது என்ற சங்கடம் உருவாகியுள்ளது.

அடுத்த செய்தி