ஆப்நகரம்

என்னா அடி- தந்தையை புரட்டி எடுத்த மகன்; அதுவும் இந்த விஷயத்துக்காக...!

கேரளாவில் தந்தையை மகன் பயங்கரமாக அடித்து, உதைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Samayam Tamil 3 Oct 2019, 1:03 pm
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுவது கேரளா. இங்கு ஏராளமான இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு மழையின் தீவிரம் எப்போதும் அதிகம் இருக்கும். சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் விருப்பமான மாநிலமாக விளங்குகிறது.
Samayam Tamil Students Fight


அதேசமயம் அவ்வப்போது சர்ச்சைகளுக்கும் வித்திடுகிறது. இந்நிலையில் கேரளாவில் தந்தையை மகன் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று, இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை தம்பதியிடம் கொள்ளை முயற்சி சம்பவம்- விசாரணையில் புதிய திருப்பம்!

அதில், கொடூரமாக தாக்கும் மகனை அருகிலுள்ள வீட்டினர் சமாதானம் செய்ய முயல்கின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. மீண்டும் தந்தையை காலால் எட்டி உதைத்து மிக மோசமாக நடந்து கொள்கிறார்.

இறுதியில் மகனிடம் தந்தை மன்னிப்பு கேட்கிறார். இதனைக் கண்ட போலீசார், சம்பந்தப்பட்ட நபர்கள் எந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் இறங்கினர். அதில், அவர்கள் மாவேலிக்கரையை சேர்ந்த ரெவிஸ்(29) மற்றும் அவரது தந்தை என்று தெரியவருகிறது.

செல்போன் திருட டிரெயினிங் கொடுக்குறாங்கப்பா: ஆந்திர கும்பலை மடக்கிய போலீஸ்!

அதாவது, ரெவிஸிற்கு மதுப் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் மது பாட்டில் ஒன்றை வாங்கி வந்து, தனது வீட்டில் ரெவிஸ் வைத்துள்ளார். இதைக் கண்ட தந்தை, அதை எடுத்து குடித்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் செல்போனில் படம்பிடித்துள்ளனர். இதையடுத்து ரெவிஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லலிதா ஜுவல்லரி கொள்ளை: புதுக்கோட்டையில் சிக்கிய 6 பேர்!

இந்த வீடியோ உடனடியாக சமூக வலைத்தளங்களில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி