ஆப்நகரம்

92 வயது வளர்ப்புத்தாயை கழிவறைக்குள் தங்க வைத்த மகன், மருமகள்..! வீடியோ...

தூத்துக்குடியில் மூதாட்டியை கழிவறைக்குள் தங்க வைத்து கொடுமை படுத்திய வளர்ப்பு மகனையும், மருமகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 25 Jan 2020, 8:05 pm
பெத்தேடுத்த தாய், தந்தையை முதுமையில் கவனிக்க முடியாமல் அனாதை இல்லத்தில் சேர்த்து விடும் நிகழ்வை திரைப்படங்களில் பார்த்து கண்ணீர் விடுபவர்களுக்கு இந்த நிஜ சம்பவம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Samayam Tamil 92 வயது வளர்ப்புத்தாயை கழிவறைக்குள் தங்க வைத்த மகன்


தூத்துக்குடி மாவட்டம் கோட்ஸ் நகரை சேர்ந்தவர் நிகோலஸ். இவரது கவனிப்பில் தாயின் சகோதரியான மரியமைக்கேல் என்ற 92 வயது மூதாட்டி இருந்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிகோலஸ் திருமணம் செய்துகொண்டார்.


இந்த நிலையில் அவரது வயதான தாயை வீட்டில் வைத்து பராமரிக்க முடியாத அவர் வீட்டின் பின் புறத்தில் இருக்கும் கழிவறையில் தங்க வைத்துள்ளார். அந்த அறையிலேயே இயற்கை உபாதைகளை கழித்து வந்த அந்த மூதாட்டி, படுக்க பாய் எதுவும் இல்லாமல் வெறும் தரையில் படுத்து வந்துள்ளார்.

சென்னையில் சுவாதி, கனடாவில் ஏஞ்சலின்... உயிருக்கு போராடும் தமிழக மாணவி...

வாட்டி வதைக்கும் குளிரிலும், கொசு கடியிலும் பல நாட்களாக தவித்து வந்த அவரது நிலைமையை கண்டுகொண்ட அக்கம் பக்கத்தினர் அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்தில் திடீர் சோதனையிட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் சமூக நலத்துறையினர் மூதாட்டியின் நிலைமையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து சமூக நலத்துறையினர் போலீசாரின் உதவியுடன் மூதாட்டியை மீட்டு அன்னை இல்லத்தில் சேர்த்தனர். பின்னர் வளர்ப்பு தாயை சரியாக பராமரிக்காமல், கழிவறையில் தங்க வைத்து கொடுமை படுத்திய நிகோலஸ் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி