ஆப்நகரம்

குடிக்க பணம் கொடுக்காத தந்தையை அடித்துக் கொன்ற மகன்

விழுப்புரம் மாவட்டத்தில் மது அருந்துவதற்கு பணம் கேட்ட நிலையில், பணம் தராத தந்தையை, பெற்ற மகனே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 8 May 2019, 8:29 pm
விழுப்புரம் மாவட்டத்தில் மது அருந்துவதற்கு பணம் கேட்ட நிலையில், பணம் தராத தந்தையை, பெற்ற மகனே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Murder Knife


விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே புதுக்கேணி கிராமத்தைச் சேர்ந்த கலியன் மகன் இருசன் (வயது 28). இவர் தனது தந்தை கலியனிடம் குடிக்க பணம் கேட்டுள்ளாா். ஆனால் பணம் தர கலியன் மறுத்துவிட்டாா். இதனால் ஆத்திரம் அடைந்த இருசன் குடிபோதையில் தடியாலும், சுத்தியலாலும் அடித்ததால் படுகாயமடைந்த கலியன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அருகில் குடியிருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த எடைக்கல் காவல் துறையினா் கொலை செய்த இருசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இருசன் சுயநினைவு இல்லாமல் அதிக போதையில், இருப்பதாக தெரிகின்றது. மது அருந்துவதற்கு பணம் தராத தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி