ஆப்நகரம்

தாயுடன் சேர்ந்து தந்தையை கல்லால் தலையில் அடித்து படுகொலை செய்த மகன்!

தாயுடன் சேர்ந்து தந்தையை கல்லால் தலையில் அடித்து மகன் படுகொலை செய்த சம்பவம்

Samayam Tamil 10 Jun 2019, 9:45 am
தேனி அருகே தாயுடன் சேர்ந்து தந்தையை கல்லால் தலையில் அடித்து மகன் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil தாயுடன் சேர்ந்து தந்தையை கல்லால் தலையில் அடித்து படுகொலை செய்த மகன்!
தாயுடன் சேர்ந்து தந்தையை கல்லால் தலையில் அடித்து படுகொலை செய்த மகன்!


தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள T.சிந்தலைச்சேரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அந்தோணிராஜா (55). இவரது மனைவி ஜெலினாமேரி (47) மற்றும் மகன் ராஜ்குமார் (22). மதுபோதைக்கு அடிமையான அந்தோணிராஜா இரவு மட்டுமல்லாது பகல் பொழுதிலும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவும் வழக்கம் போல அந்தோணிராஜா குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவியை அடித்து சித்தரவதை செய்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது மகன் ராஜ்குமார் (22) எவ்வளவு தடுத்தும் நிற்காமல் அந்தோணிராஜா மீண்டும் தனது மனைவியை தாக்கியுள்ளார்.

தனது கண்ணெதிரே தாயை அடித்து கொடுமைப்படுத்துவதை பார்த்து தாங்கமுடியாத ராஜ்குமார், பக்கத்தில் இருந்த பெரிய கல்லை எடுத்து தன் தந்தையின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் நிலைதடுமாறி அந்தோணி ராஜா கீழே விழுந்துள்ளார். அதன் பின்பு தாயும், மகனும் சேர்ந்து அந்தோணி ராஜாவை சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தேவாரம் காவல் நிலைய ஆய்வாளர் பரிமளாதேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்தோணிராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரைக் கண்டதும் ராஜ்குமார் தப்பியோடி விட்டார்.

போலீசார் விசாரணையில் மகனுடன் சேர்ந்து கொலை செய்தததை ஜெலினாமேரி ஒப்புக் கொண்டதால் போலீசார் ஜெலினா மேரியை கைது செய்தனர். தப்பி ஓடிய அவரது மகன் ராஜ்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். தாயுடன் சேர்ந்து தந்தையை கல்லால் தலையில் அடித்து மகன் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி