ஆப்நகரம்

திருவண்ணாமலை மலை உச்சியில் நடிகைக்கு தடையில்லை? சூது கவ்வும் பரபரப்பு

திருவண்ணாமலை மலை உச்சியில் தடையை மீறி தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்ததாக நடிகை சஞ்சிதா ஷெட்டி மீது நடவடிக்கை

Samayam Tamil 7 Dec 2020, 9:38 pm
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி கோவில் வளாகத்தினுள் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
Samayam Tamil sanjitha shetty


கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு இந்த வருடம் பக்தர்கள் கோயிலுக்குள் செல்லவும், மலைக்கு செல்லவும், கிரிவலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்திருந்தது. முன்னதாக மகா தீபத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கான வழிகாட்டு நெறிமுறையும் வெளியிடப்பட்டு அதன்படி குறைந்த அளவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.


இந்த நிலையில், தமிழில் சூதுகவ்வும், பீட்சா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி தடையை மீறி திருவண்ணாமலை கோவில் மலை உச்சிக்கு சென்று தீபம் ஏற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பொதுமக்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். அதனை தொடர்ந்து நடிகை சஞ்சிதா ஷெட்டியிடன் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தாம்பத்யமே நடக்கல, வேதனையில் மனைவி, கணவனின் பதில்..!

வருடாவருடம் திருவண்ணாமலை தீப திருவிழா தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் ஒரு நாளைக்கு சாதாரணமாகவே ஒரு லட்சம் பேரும், தேர் மற்றும் தீபத் திருவிழாவின்போது 20 முதல் 20 லட்சம் பக்தர்களும், பொதுமக்களும் கலந்துகொள்வார்கள்.


இந்நிலையில் இந்த வருடம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளுக்கு 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் தடையை மீறி நடிகை மலை மேலே சென்று தரிசனம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடிகை சஞ்சிதா ஷெட்டி மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி