ஆப்நகரம்

தூத்துக்குடியில் என்கவுண்டர்? காவலரை கொன்ற ரவுடியின் நிலை என்ன?

தூத்துக்குடி அருகே நாட்டு வெடிகுண்டு வீசி காவலரை கொன்ற ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளன.

Samayam Tamil 18 Aug 2020, 4:07 pm
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மணக்கரை அருகே ரவுடி துரைமுத்து என்பவரை பிடிக்க போலீசார் சென்றபோது, தப்பி ஓடிய துரைமுத்து கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை போலீசாரை நோக்கி வீசியுள்ளார். இதனால் வெடிகுண்டு வெடித்து காவலர் சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்தியிலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
Samayam Tamil thoothukudi police attack


சம்பவம் அறிந்து விரைந்த காவல் அதிகாரிகள் ரவுடி துரை முத்துவை கைது செய்ததாக முதற்கட்ட தகவல் வந்தது. இந்நிலையில், காவலர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி துரை முத்து என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடியில் வெடிகுண்டு வீசி காவலர் சம்பவ இடத்திலேயே பலி..! ஒருவர் கைது

ரவுடி துரை முத்து மீது ஏற்கெனவே பல கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும், இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அவரை பிடிக்க முயற்சித்த போது நாடு வெடிகுண்டு வீசி தப்பிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி