ஆப்நகரம்

5 லட்சம் தரோம்... சூர்யா பொய் அறிக்கை.. நெல்லை ஏஎஸ்பி விவகாரத்தில் பரபர..!

நெல்லை ஏஎஸ்பி-யால் பாதிக்கப்பட்ட சூர்யா என்ற இளைஞரை காவல்துறை மிரட்டி பொய் அறிக்கை கொடுக்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 1 Apr 2023, 1:37 pm
நெல்லை ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐ.பி.எஸ்ஸால் பல் உடைப்பு சித்திரவதைக்குள்ளான சூர்யா திடீர் திருப்பமாக கீழே விழுந்து பல் உடைந்ததாக சாட்சி கொடுத்துள்ளார். இது பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியதோடு காவல்துறை மீது சந்தேகத்தை கிளப்பியது. இந்த நிலையில், சூர்யாவை மிரட்டி அப்படி சொல்ல வைத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil balveer singh


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல்நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்வதாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், பல்வீர் சிங்க் விவகாரம் குறித்து விசாரிக்க சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து பல்வீர் சிங்க் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பிறகு கண்டனங்கள் வலுத்ததை தொடர்ந்து சஸ்பெண்டும் செய்யப்பட்டார். தற்போது பாதிக்கப்பட்டவர் சம்மன் இல்லாமலே சார் ஆட்சியர் அலுவலகத்தில் சாட்சி தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Boothapandi Thevar & Ramalakshmi


ஏற்கனவே லட்சுமி சங்கர், சுபாஷ், சூர்யா ஆகிய மூன்று பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. இதில் சங்கரும், சூர்யாவும் கீழே விழுந்து பற்கள் உடைந்ததாக விசாரணையில் தெரிவித்தனர். இது வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதே சமயம், விசாரணைக்கு வருபவர்கள் போலீசுக்கு பயந்து சாட்சி தெரிவிப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் ஏஎஸ்பி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து, மாரி, செல்லப்பா, சுபாஷ், ரூபன், மாரி ஆகிய 6 பேரும் ஏஎஸ்பி பல்வீர் சிங்க்தான் தான் தங்கள் பற்களை பிடுங்கியதாக சாட்சி கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், பிறழ் சாட்சியாக மாறியதாக கூறப்படும் சூர்யாவின் தாத்தா ரகசிய தகவலை பகிர்ந்ததாக சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பூதப்பாண்டி தேவர் - ராமலட்சுமியின் பேரன்தான் சூர்யா. இவர்கள், தனது பேரன் சூர்யாவை கீழே விழுந்ததால் பல் உடைந்ததாக வாக்குமூலம் அளிக்குமாறு போலீசார் மிரட்டியதாக கூறியுள்ளனர்.

மேலும், அப்படி சாட்சி கொடுத்தால் சூர்யா மீது இனிமேல் எந்த வழக்கும் போடமாட்டோம் என்றும் இழப்பீடாக 5 லட்சம் கொடுப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது தனது பேரன் எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை அவனை தொடர்பும் கொள்ளவும் முடியவில்லை.. அவனுக்கு நான்கு மாத கைக்குழந்தை உள்ளது என்று சூர்யாவின் தாத்தா கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி