ஆப்நகரம்

சுபஸ்ரீ மரணம்: குற்றவாளியை நெருங்குகிறார்களா தனிப்படை.! தீவிரமாகிய ஜெயகோபால் வேட்டை..

பேனர் விவகாரத்தில் குற்றவாளியாகத் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை பற்றி துப்பு கிடைத்ததாக ஒகேனக்கல் அருகே போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 27 Sep 2019, 3:22 pm
பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து லாரி மோதி பலியான சுபஸ்ரீயின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த விபத்தில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டு வரும் ஜெயகோபால் தொடர்ந்து தலைமறைவாகி வருகிறார்.
Samayam Tamil 3


பள்ளிக்கரணை போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் சார்பில் ஜெயகோபால் மீது தடை மீறி பேனர் அமைத்ததற்கும், விபத்தை ஏற்படுத்தியதற்கும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணையின் ஆரம்பத்திலேயே இவர் நெஞ்சு வலி காரணமாக பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதற்குப் பின்பு தலைமறைவான ஜெயகோபாலை போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். இந்நிலையில் அவருடைய செல்போன் எண் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் செல்போன் எண்களையும் போலீசார் சேகரித்து ட்ராக் செய்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் ஜெயகோபால் ஒகேனக்கல் மற்றும் திருச்சி நகரில் இருப்பதாக தற்போது துப்பு கிடைத்துள்ளது. இதனையொட்டி அவரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அந்தந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். ஒகேனக்கல் மற்றும் திருச்சி நகரில் இருக்கும் முக்கிய ஹோட்டல்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ஜெயகோபால் தலைமறைவாகி இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த தனிப்படை தேடி வருகின்றது.

அடுத்த செய்தி