ஆப்நகரம்

கீழக்கரை: இலங்கை நபர் சிறையில் அடைப்பு!

கீழக்கரையில் தங்கி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட இலங்கை நபரை சிறையில் அடைக்க உத்திடப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Jan 2020, 7:03 am
இலங்கையைச் சேர்ந்தவர் முகமது ரிபாஸ் (36). இவர் 2004ஆம் ஆண்டு கொழும்புவில் இருந்து வேலை நிமித்தமாக துபாய் சென்றார். அங்கிருந்து 2009ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் சென்னை வந்து ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார்.
Samayam Tamil கீழக்கரை


கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த ரோஷன் சல்மா என்பவரை 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 4 குழந்தைகள் உள்ளன. கீழக்கரையில் குடும்பத்துடன் வசித்து வந்தார் முகமது ரிபாஸ். 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் போதை பவுடர் கடத்தியதாக இவர் உள்பட 4 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பசிக்கு பொங்கலை சாப்பிட்ட பெண் குழந்தைகள் பலி.! திருப்பத்தூரில் சற்றுமுன் நேர்ந்த சோகம்...

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2019 ஏப்ரலில் இவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து வாட்ஸ் அப் குரூப் தொடங்கி இஸ்லாத்திற்கு ஆதரவாகவும், இஸ்லாம் அல்லாதோருக்கு எதிராகவும் விஷம பிரசாரம் செய்வதுடன், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை கொலை செய்யவும் திட்டம் தீட்டி வந்தனர்.

மேட்ரிமோனியில் சூழ்ச்சி... சேலை கட்டிய பெண்களுக்கு குறி... செல்பி புள்ளைங்க உஷார்..!

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் குற்றங்கள் புரிந்த முகமது ரிபாஸ், வெளிநாடுகளில் வேலை நிமித்தமாத ஆட்களை சட்ட விரோதமாக அனுப்பி வந்தார். இதனையடுத்து இவரிடமிருந்து அமைதி மற்றும் நன்னடத்தை உறுதிமொழி ஆவணம் பெறப்பட்டது.

உறுதிமொழி ஆவணத்தை மறைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு மூலம் , வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு சலுகைகளைப் பெற்றார்.

எவ்வளோ சொல்லியும் கேட்கல... கையில் துப்பாக்கியுடன் டிக் டாக்... டமால் என்று கேட்ட சத்தம்..!

இது குறித்து காஞ்சிரங்குடி வி.ஏ.ஓ., கீழக்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்படி, நன்னடத்தை பிணைய காலமான 2022 நவம்பர் 19 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கீழக்கரை தாசில்தார் வீரராஜ் உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி