ஆப்நகரம்

எஸ்ஐ வில்சன் கொலை: தீவிரவாதிகள் 2 பேர் போலீசாரிடம் ஒப்படைப்பு...

களியக்காவிளை சிறப்பு காவல் உதவு ஆய்வாளரை சுட்டு கொலை செய்த இரண்டு குற்றவாளிகளையும் போலீஸ் காவலில் வைத்த விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவு.

Samayam Tamil 21 Jan 2020, 5:44 pm
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடி அருகே கடந்த ஜனவரி 8 ஆம் தேதி பணியில் இருந்த எஸ்ஐ வில்சனை இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகள் இருவரது புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டனர்.
Samayam Tamil களியக்காவிளை எஸ்ஐ வில்சன் கொலை


அதன் பிறகு கொலை செய்தவர்கள் தவுபிக், அப்துல் சமீம் என இருவர்தான் என தெரிந்தது. பின்னர் இருவருக்கும் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து
பதுங்கியிருந்த இரு தீவிரவாதிகளும் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டு தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அனுமதியின்றி டிரக்கிங்... கணவர் முன்பு இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்...

பின்னர் அவர்கள் இருவரும் குழித்துறை நீதிபதிக்கு முன்பாக ஆஜர் படுத்தப்பட்டு, உபா சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்களை போலீஸ் காவலில் 28 நாட்கள் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி இரண்டு பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்யவில்லை. இதனால் அவர்கள் துப்பாக்கிகளை எங்கு பதுக்கி வைத்துள்ளனர், இந்த கொலை வழக்கில் யார் யார் சம்மந்தப்பட்டுள்ளனர் என்ற கோணத்தில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தலாம் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி