ஆப்நகரம்

வில்சன் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது!

வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 1 Feb 2020, 4:17 pm
களியாக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கடந்த ஜனவரி 8ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களைப் பிடிக்க தமிழ்நாடு, கேரள போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டனர். பின்னர் இந்தக் கொலையைச் செய்த அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவரை உடுப்பியில் கைது செய்தனர்.
Samayam Tamil வில்சன் கொலை வழக்கு


மேலும் இந்த கொலைக்கு உறுதுணையாக இருந்தவர்கள், ஆயுதங்கள் கொடுத்தவர்கள் என வேறு சிலரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.

அயனாவரம் சிறுமி வழக்கு: 15 பேரை குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம்...

மேலும் கொலை நடத்தப்பட்ட இடத்தில் சமீம், தவுபீக் ஆகியோரை அழைத்துச் சென்று நடித்துக்காட்டச் செய்தனர். அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் சமீமுக்கு பண பரிவர்த்தனை செய்ய உதவியவர்கள் கடந்த ஜனவரி 22ஆம் தேதி ராமநாதபுரம் அடுத்த தேவிபட்டிணத்தில் முகாமிட்டுருந்தது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்க்க சதி திட்டமிட்ட போது போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அமீர், பிச்சைக்கனி, முகமது அலி ஆகிய மூவரை கைது செய்தனர்.

பரனூர் டோல்கேட்: 18 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்தது இவர்கள் தானாம்!

அப்போது போலிஸாரிடம் இருந்து தப்பியோடிய முக்கிய குற்றவாளியான சேக் தாவூத்தை பிடிக்க சிறப்பு தனிபடை அமைத்து தேடி வந்த நிலையில் இன்று காலை ராமநாதபுரம் அடுத்த சித்தார்கோட்டை மீனவ கிராமத்தில் உள்ள உடற் பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சிறைத் துறையிலும் ஊழல்: இப்படியெல்லாமா பண்ணுவாங்க?

ஷேக் தாவூத் ஏற்கெனவே என்ஐஏவால் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தார். வெளியே வந்த அவர் வாட்ஸ் அப் குழு ஒன்று தொடங்கி இளைஞர்களை மூளை சலவை செய்து நாச வேலைகளில் ஈடுபடத் தூண்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அடுத்த செய்தி