ஆப்நகரம்

வில்சன் கொலை: திட்டமிட்டு அரங்கேறியது - கேரள போலீஸ்!

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதாக கேரள போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 13 Jan 2020, 12:48 pm
ஜனவரி 8ஆம் தேதி களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Samayam Tamil வில்சன் கொலை


சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொலையில் ஈடுபட்டது தவுபீக், ஷமீம் என்ற இருவர் எனத் தெரியவந்தது. இந்நிலையில் இவர்களைப் பிடிக்க தமிழ்நாடு, கேரள போலீஸார் தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் கேரளாவில் கொலைக்காக திட்டமிட்டனர் என்று கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர். கொலை நடந்த அன்று கேரளாவில் பொது வேலைநிறுத்தம் என்பதால் வாகனங்கள் ஓடவில்லை. எனவே இரவு எட்டு மணியளவில் நெய்யாற்றங்கரையில் ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் அதிக பணம் கொடுப்பதாகக் கூறி வாடகைக்கு ஆட்டோவைப் பிடித்து வந்துள்ளனர்.

பொங்கல் பரிசு வாங்கியாச்சா?- உடனே ரேஷன் கடைக்கு கிளம்புங்க; அப்புறம் வாங்க முடியாது!

இரவு 9.45 மணிக்கு இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக விசாரணையை முடுக்கியுள்ள இரு மாநில போலீஸாரும் தவுபீக்கின் நண்பர் செய்யது அலியைத் தேடி வருகின்றனர். அவர் இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிரம்மாண்ட வடிவில் ”ஏர் உழும் உழவன்” - உலக சாதனை படைத்து ஆச்சரியம்!

இவர்கள் சார்ந்த அமைப்பைச் சேர்ந்த மூன்று பேரை கர்நாடக போலீஸார் கைது செய்திருந்தனர். அதற்கு பதிலடியாக உதவி ஆய்வாளர் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியா இந்துக்கள் நாடுதான்: பிரேமலதா

இந்நிலையில் வில்சனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்குப் பின்னர் வில்சன் மனைவி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என் கணவரை இழந்து வாடும் எங்களுக்கு ஆறுதல் கூறியதுடன் முதலமைச்சர் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். எனது மூத்த மகளுக்கு அரசு வேலை வழங்குவதாக கூறியுள்ளார். இது போன்ற கொடுமை வேறு எந்த போலீஸாருக்கும் நடைபெறக் கூடாது. குற்றாவாளிகளைப் பிடித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்” என்று கூறினார்.

அடுத்த செய்தி