ஆப்நகரம்

தூத்துக்குடி பிரபல ரவுடி துரைமுருகன் என்கவுண்டரின் பின்னணி..!

தூத்துக்குடி அருகே இன்று பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்

Samayam Tamil 15 Oct 2021, 9:02 pm
தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தை சேர்ந்தவர் துரைமுருகன் ( 44 ). இவர் மீது தூத்துக்குடி, நெல்லை, மதுரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
Samayam Tamil தூத்துக்குடி என்கவுண்டர்! க்ரைம்


இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவரை கொலை செய்து நெல்லையில் புதைத்த வழக்கு தொடர்பாக போலீசார் இவரை தேடி வந்து வந்தனர். இந்த சூழலில் முள்ளக்காடு அருகே உள்ள உப்பள பகுதியில் துரைமுருகன், மற்றும் அவரது கூட்டாளிகள் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது

இதை அடுத்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜபிரபு உள்ளிட்ட போலீசார் இன்று அப்பகுதியை சுற்றி வளைத்து ரவுடி துரைமுருகனை பிடிக்கும்போது துரைமுருகன் உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் போலீசார் டேவிட் ஆகியோரை தாக்கியுள்ளார்.

இதனால் அவர்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் போலீசார் துரைமுருகனை சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்தில் துரைமுருகன் பலியானார். மேலும் அவருடன் இருந்த திருச்சியை சேர்ந்த ராஜா என்பவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். மேலும் மற்றொருவன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது '' தூத்துக்குடி கூட்டாபுளியை சேர்ந்த துரைமுருகன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 3 பேருடன் இந்த பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கிடைத்த தகவல்படி போலீசார் அவரை சுற்றி வளைக்க முயன்றபோது அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். அப்போது தற்பாதுகாப்புக்காக போலீசார் சுட்டதில் துரைமுருகன் சம்பவ இடத்தில் பலியானதாக தெரிவித்தார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்தார்.

13 வயது சிறுமி மரணம்: உடலுறவுக்கு பின் காதலனே கொன்ற கொடூரம்..! அதிர்ச்சி பின்னணி

காயமடைந்த போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் என்கவுண்டரில் பலியான ரவுடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் 20 மேற்பட்ட வழக்குகள் கொண்ட ரவுடியை போலீசார் என்கவுன்டர் செய்த சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி