ஆப்நகரம்

குழந்தையை கவ்விக்கொண்டு சுற்றிய தெரு நாய்கள்..! நெஞ்சை உலுக்கிய சம்பவம்

கடலூர் அருகே பச்சிளங்குழந்தையை வாயில் கவ்விக்கொண்டு சுற்றிய தெரு நாய்கள்

Samayam Tamil 14 Jan 2021, 4:20 pm
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த அருந்ததியினர் காலனியில் நேற்று காலை தெரு நாய் ஒன்று பச்சிளங்குழந்தையை வாயில் கவ்விக்கொண்டு அப்பகுதியில் ஓடி வந்துள்ளது. அதை கண்டு அதிர்ச்சியுற்ற அப்பகுதியினர் கையில் கிடைத்த கற்களை கொண்டு நாயை துரத்தினர்.
Samayam Tamil file pic


அந்த நாயை பின் தொடர்ந்து மேலும் சில தெரு நாய்கள் ஓடி வரவே, பதற்றமான பொதுமக்கள் விடாமல் கற்களை கொண்டு வீசினர். இந்நிலையில், சில தூரம் வரை சென்ற நாய், புதர் பக்கமாக குழந்தையை போட்டுவிட்டு தப்பியது. அங்கு சென்ற பார்த்தபோது, தொப்புள்கொடியுடன் ஆண் குழந்தை சடலமாக இருப்பதை கண்டு கண்கலங்கினர்.

தொடர்ந்து போலீசுக்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்துக்கு வந்த திட்டக்குடி போலீசார் குழந்தையின் சடலத்தை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் உள்ள சில கிளினிக்கில் கருக்கலைப்புகள் நடந்து வருவதும், அப்படி இறந்து பிறக்கும் குழந்தைகளை வெள்ளாற்றில் புதைத்து வருவதும் தெரிய வந்தது. அப்படி வீசப்பட்ட குழந்தையின் சடலத்தை தான் நாய்கள் கவ்விக்கொண்டு வந்திருக்கும் என சந்தேகிக்கின்றனர்.

சென்னையில் 11 பெண்களை ஏமாற்றி திருமணம்..! முதலிரவு வில்லன் கைது

நாய்கள் கவ்விக்கொண்டு வந்த அந்த குழந்தையின் ஒரு கை முற்றிலுமாக குதறப்பட்டிருந்ததை கண்ட அப்பகுதியினர் கண்கலங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி