ஆப்நகரம்

கோவை: நீட் தேர்வுக்கு தயாராகுமாறு தந்தை சொன்னதால் மகன் தற்கொலை!

கோவை அருகே நீட் தேர்வு எழுத தந்தை வற்புறுத்தியதால் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 May 2020, 9:10 pm
கோவை சரவணம்பட்டி ஜி.கே.எஸ் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாஸ்கர் (51). இவரது மூத்த மகன் சரண் பாலாஜி (19) 12ம் வகுப்பு தேர்வு எழுதி ரிசல்ட்க்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
Samayam Tamil நீட் தேர்வுக்கு தயாராகுமாறு தந்தை சொன்னதால் மகன் தற்கொலை


இந்த நிலையில் தந்தை பாஸ்கர் மகனை நீட் தேர்வு எழுத தயாராகும் படி தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த சரண் பாலாஜி தந்து அறையில் உள்ள மின் விசிறியில் புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் சரண் பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exclusive: காஞ்சிபுரத்தில் பெண் தாசில்தார் உதவியுடன் ரேஷன் அரிசி பதுக்கல்?

தந்தை படிக்க சொல்லியதால் மனமுடைந்து மாணவன் தற்கொலை செய்து கொண்டது அங்கு குடியிருப்பவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் தற்கொலை செய்துகொண்ட எண்ணற்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நிறையவே நிகழ்ந்துள்ளன. ஆனால் நீட் தேர்வுக்கு தயாராக சொல்லி தந்தை வற்புறுத்தியதற்கு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகம்தான்.

12ம் வகுப்பு தேர்வினை எழுதி ஆசை ஆசையாக முடிவுக்கு காத்துக்கொண்டிருந்த மாணவர், தன்னுடைய மதிப்பெண்கள் வரும் முன்னரே நீட் தேர்வினால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி