ஆப்நகரம்

சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் கத்தி, துப்பாக்கியுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்..!

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் தனியார் கல்லூரியில் மாணவர்கள் இரண்டு குழுவாக இன்று தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Feb 2020, 7:55 pm
சென்னை வண்டலூரை அடுத்த பொத்தேரியில் இயங்கி வரும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழத்தில் உள்ள மாணவர்கள் சிலர் இரண்டு குழுவாக கேன்டீனுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
Samayam Tamil சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் கத்தி துப்பாக்கியுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்


இந்த சண்டையில் கத்தி, கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தியதால் அங்கு கூடியிருந்த மாணவர்கள் பதறியடித்து ஓடினர். கையில் பட்டாக்கத்தி மற்றும் துப்பாக்கி வைத்து மோதலில் ஈடுபட்ட இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த மாணவர்கள் செல்போனில் பதிவு செய்து வலைத்தளங்களில் பரப்பினர்.


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் கல்லூரிகளுக்கு சென்று தற்போது விசாரணை மேற்கொண்டும், இந்த வீடியோ காட்சியில் பதிவான மாணவர்களை தேடியும் வருகின்றனர்.

இதேபோல் கடந்த வருடம் ஒரு ஒரு ரவுடியின் பிறந்தநாள் விழாவை கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இருசக்கர வாகனம் மீது வைத்து பெரிய கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவமும் இந்த கல்லூரியில் அரங்கேறியுள்ளது.

விழுப்புரத்தில் பங்க் மேலாளர் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை..! பதறவைக்கும் சம்பவம்

இதேபோல் கடந்த வருடம் வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலம் என்ற பகுதியில் ஒரு கல்லூரி மாணவன் முக்கேஷ் என்பவரை அவருடைய நண்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் இந்த பகுதியில் அரங்கேறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து துப்பாக்கி சுலபமாக அனைவரது கையிலும் கிடைக்கின்றது என்பது இந்த சம்பவங்கள் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம்.

ரவுடிகளின் கையில் இருக்கும் கள்ளத்துப்பாக்கிகள் தற்போது கல்லூரி மாணவர்களிடையே சுலபமாக கிடைப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்துகின்றன.

முறையாக அனுமதி பெறாமல் முறைகேடாக கள்ளத்தனமாக துப்பாக்கிகள் வைத்திருக்கும் கல்லூரி மாணவர்கள் கையில் துபாக்கி வந்தது எப்படி என்பதெல்லாம் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி