ஆப்நகரம்

நெல்லை பள்ளி விபத்து: உயிரிழப்பு 3ஆக உயர்வு..!

நெல்லையில் அரசு உதவிபெறும் பள்ளி கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் பலி, மேலும் மூன்று மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை

Samayam Tamil 17 Dec 2021, 12:35 pm
நெல்லை டவுன் சாஃப்ட்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. சுவர் இடிந்து விழுந்ததில் கழிவறைக்கு சென்ற மாணவர்களில் மூன்று பேர் படுகாயமடைந்து அவர்களை மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Samayam Tamil nellai school accident


அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், விபத்து ஏற்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வரவில்லை என்றும், பள்ளி கழிவறையை சரியாக பராமரிக்காததால்தான் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

மேலும், அந்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாக இருக்கும் சூழலில், மாநகராட்சி பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்யாமலும், சரி வர பராமரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது. சம்பவ இடத்திற்கு நெல்லை காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன் ஆய்வு செய்து வரும் நிலையில் இடிபாடுகளை அகற்றும் பணியை தீயணைப்புத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி