ஆப்நகரம்

போலீசுக்கு என்ன உரிமை? போதையில் இருந்தவரின் மண்டையை உடைத்த சப் இன்ஸ்பெக்டர்

அறந்தாங்கி அருகே மதுபோதையில் இருந்தவரை போலீசார் அடித்து மண்டையை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Apr 2021, 3:47 pm
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி தோப்புவயல் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி. இவருடைய மகன் ராமு (32). கொத்தனார் வேலை செய்து வரும் இவர் மணமேல்குடியில் பணி முடிந்து தனியார் பேருந்தில் ஏறி கட்டுமாவடிக்கு சென்றுள்ளார். இதனிடையே மதுபோதையில் இருந்த ராமு நடத்துனருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடத்துநர் கட்டுமாவடி சோதனைச்சாவடியில் இரவு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் துரைமுருகனிடம் ராமுவை ஒப்படைத்தார்.
Samayam Tamil போராட்ட புகைப்படம்


இந்நிலையில் மதுபோதையில் இருந்த ராமு போலீசாருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆனதால் உதவி ஆய்வாளர் துரைமுருகன் தனது கையில் வைத்திருந்த லத்தியால் ராமுவை தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராமு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இந்நிலையில், உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கட்டுமாவடி பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மணமேல்குடி காவல் ஆய்வாளர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

கரூர் காதலிக்கு அவசர திருமணம், மலேசியா காதலன் ஹீரோயிசம்..! பரபரப்பு சம்பவம்

அதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மதுபோதையில் இருப்பவர்களிடம் போலீஸார் தங்கள் கடமையை மீறி கட்டையால் தாக்குவதும் லத்தியால் அடிப்பதும் தொடர்கதையாகி வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி