ஆப்நகரம்

கோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை..

கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

Samayam Tamil 17 Sep 2019, 4:12 pm
கோவை மாவட்டத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு தனியார்ப் பள்ளியில் படித்து வந்த முஸ்கான் என்ற 6 வயது சிறுமி மற்றும் அவரது தம்பி ரித்திக் ஆகியோரை மனோகரன் என்பவர் கடத்தி கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்நிலையில் பாலியல் குற்றவாளி மனோகரன் மீது உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.
Samayam Tamil xxxxx


இந்த இரட்டை கொலை வழக்கு விசாரணையில் சிக்கிய மற்றொரு குற்றவாளியான மோகன்ராஜ், போலீசிடம் இருந்து தப்பியபோது என்கவுண்டர் செய்யப்பட்டு இறந்தார். இந்நிலையில் தன் மீதான மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

மனுவை ஏற்ற நீதிபதிகள் வழக்கை மறு விசாரணை செய்யும் அடிப்படையில் பாலியல் குற்றவாளியான மனோகரனின் மரண தண்டனையை அக்டோபர் 20 வரை நிறுத்தி வைக்க இடைக்காலத் தடைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி