ஆப்நகரம்

எங்கள் கண் எதிரில் கட்டி பிடிப்பார், எல்லாமே "குட் டச்" தான் - சுஷில்ஹரி பள்ளி ஆசிரியர்கள்

சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபாவை குறித்து அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அளித்த பேட்டி

Samayam Tamil 17 Jun 2021, 8:18 pm
சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் கொடுத்ததன் பேரில் அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த பாரதி, தீபா என்ற 2 பெண் ஆசிரியர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்


இதனிடையே டேராடூனில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபாவை சென்னை சிபிசிஐடி போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். அவரை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் சென்னையில் சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது, சிவசங்கர் பாபா தலைமறைவாகிவிட்டார் என்ற செய்தி தவறானது. அவர் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


அவரை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் எதுவும் வெளியாகவில்லை. வழங்கி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை குறித்து யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம். தாத்தாவாக, குருவாக தான் சிவசங்கர் பாபா மாணவர்களை தொடுவார். எங்கள் கண் எதிரில் கட்டி பிடிப்பார். இவை அனைத்தும் "குட் டச்" தான் என இவ்வாறு அந்த ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் கூறினர்.

ஆபாச பேச்சுக்கு யூடியூபில் கொட்டிய பணம்... பப்ஜி மதனின் வங்கி கணக்குகள் ஆய்வு..!

சிவசங்கர் பாபாவுக்கு எதிராக புகார்கள் கொடுக்க வேண்டும் என்றால் புலன்விசாரணை அதிகாரி குணவர்மன் தொலைபேசி எண் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம் என்று 98405 58992 சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

மின்னஞ்சல் முகவரிக்கு inspocu2@gmail.com -ல் புகார்கள் தெரிவிக்கலாம்.

அடுத்த செய்தி