ஆப்நகரம்

மதுரையில் கொடூர சம்பவம்; பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் எடுத்த பயங்கர முடிவு!

தனது நண்பனின் அறையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Jun 2019, 7:54 pm
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.கல்லணை. இவர் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியனில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் போட்டித் தேர்விற்கு தயாராவதற்கு மதுரை சென்றுள்ளார்.
Samayam Tamil Dead


பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கடந்த 2017ஆம் ஆண்டு கல்லணை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கு ஒன்றும் நிலுவையில் இருக்கிறது.

இந்த சூழலில் தல்லாகுளத்தில் உள்ள காவலர் குடியிருப்பில், தனது நண்பன் சுந்தரின் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று காலை வழக்கம் போல், சுந்தர் கிளம்பி பணிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கல்லணை, வீட்டு மேற்கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன், கல்லணை யாரிடமோ தொலைபேசியில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அடுத்த செய்தி