ஆப்நகரம்

'கணவனிடம் கிடைக்காத சுகம் அவனால் கிடைக்கிறது' - 'கள்ளகாதலி'யின் கதை

திருமண உறவை மீறிய காதலால் தனக்கு கிடைத்த அனுவத்தை குறித்து ஒரு பெண் கொடுத்துள்ள வாக்குமூலம்

Samayam Tamil 27 Sep 2022, 5:16 pm
'கள்ளக்காதல்' என்ற வார்த்தையை காலப்போக்கில் மனிதர்களே உருவாக்கிக்கொண்டதுதான் என்று சொல்லும் தமிழ் ஆர்வலர்கள், காதலில் நல்ல காதல் கெட்ட காதல் என்று எதுமே இல்லை என்கின்றனர். திருமணமான ஆணோ, பெண்ணோ துணைக்கு தெரியாமல் வேறொருவருடன் உடல் உறவு வைத்துக்கொள்வதையும், காதலில் வீழ்வதையும் 'திருமண உறவை மீறிய காதல்' அல்லது உறவு என்று சொல்வதே சரி என்கின்றனர். ஆனால், இதையொட்டி நிகழும் கொலை, தற்கொலை சம்பவங்கள் அகோரமானவை. குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டே அந்தரங்கத்தை மூன்றாம் நபருடன் பகிர்வது துணையின் மனநிலையை எந்த அளவுக்கு சீர்குலைக்கும் என்பதைதான் அதுபோன்ற கொலை, தற்கொலை சம்பவங்கள் காட்டுகிறது.
Samayam Tamil woman affair


துணையின் எதிர்பார்ப்பை எந்த அளவிலும் பூர்த்தி செய்யாமல் சுயநலமாக இருப்பதும், தான் சந்தோசம் அடைந்தால் போதும் என்ற நிலையில் வாழ்வதும் திருமண உறவை மீறிய உறவுக்கு வழி வகுத்துவிடுகிறது என்கின்றனர். அந்த வகையில் கணவனுக்கு தெரியாமல் வேறொருவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட பெண்கள் சிலர் பகிர்ந்துகொண்ட கதையை இங்கே பார்க்கலாம் .

தாம்பத்யத்தில் திருப்தி

எனது கணவர் மிகவும் அன்பானவர், என்னை நன்றாக பார்த்துக்கொள்வார். ஆனால், தாம்பத்ய உறவில் மட்டும் அவரால் என்னை திருப்தி படுத்தமுடியவில்லை. முன் விளையாட்டில் கொஞ்சம்கூட ஈடுபடமாட்டார். 5 நிமிஷத்துக்குள் அனைத்தும் முடிந்துவிடும். செக்சில் கடுமையான விரக்தியில் இருக்கும் பெண் நான். ஆனால், அதைப்பற்றி அவர் சிந்திக்கவே மாட்டார். அவர் திருப்தி அடைந்தால் போதும் என்று இருப்பார். இந்நிலையில் தான் என்னுடைய பழைய நண்பனை சந்தித்தேன். அவனுக்கு திருமணமாகவில்லை. பார்க்க ஸ்மார்ட்டாக இருப்பான். இருவரும் போன் எண்களை பகிர்ந்துகொண்டோம்.

அவனுக்கு திருமணமாகாததால் என்னுடன் அதிக நேரம் சேட்டிங் செய்வான். இரவிலும் எனது கணவருக்கு தெரியாமல் நான் பேசுவேன். ஒருநாள் எனது மன குமுறல்களை அவனிடம் சொல்ல வாய்ப்பு கிடைத்தது. இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தோம். எனக்கு கிடைக்க நினைத்த கிடைக்காமல் இருக்கும் சுகத்தை அவனிடம் அனுபவித்தேன். மாதத்தில் ஐந்து ஆறு நாட்கள் செக்ஸ்க்காகவே இருவரும் சந்தித்து வருகிறோம். என்னுடைய தேவைகளை புரிந்து அதை தீர்ப்பவனாக அவன் இருக்கிறான். இப்போது எனக்கு எந்த விரக்தியும் இல்லை. வீட்டிலும் சந்தோசமாக இருக்கிறேன். அது அவனால்... எனது கணவனையும் நான் தொந்தரவு செய்வதில்லை. அவர் கொடுக்க வேண்டியது அவன் மூலம் எனக்கு கிடைக்கிறது. வாழ்க்கை சமநிலையாக இருக்கிறது... (தொடரும்)

அடுத்த செய்தி