ஆப்நகரம்

போன வாரம் பிரபலம், இந்த வாரம் நாசம்! விஷம் குடித்ததாக வீடியோ வெளியிட்ட இளம்பெண்

காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன் தன்னை விட்டு சென்றதாக கூறி நெட்டிசன்க்ளின் ஆதரவை பெற்றிருந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 3 Mar 2020, 4:30 pm
கடந்த மாதம் காதலர் தினத்தன்று டிக்டாக்கில் வைரலான பெண்தான் இவர். தன்னை ஒருவர் காதலித்து திருமணம் செய்ததாகவும், சில நாட்கள் கழித்து தன்னிடம் எதையும் சொல்லாமல் வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டதாகவும் யூடியூப் சேனல் ஒன்று எடுத்த சாலை பேட்டியில் தெரிவித்திருந்தார்.
Samayam Tamil டிக்டாக்கில் விஷம் குடித்ததாக வீடியோ வெளியிட்ட இளம்பெண்


அந்த வீடியோ வெளியானதையடுத்து வழக்கம்போல நெட்டிசன்கள் அப்பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்தனர். மேலும் உண்மை காதலுக்கு நீங்கள்தான் உதாரணம் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினர்.

சாலையில் நடந்து சென்ற எனக்கு இப்படியொரு ரசிகர்களா என பரவசம் அடைந்த அவர், தனது தங்கையுடன் தொடர்ச்சியாக டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்தார். அதற்கும் லைக்குகள் குவிந்தன. அதே சமயம் கணவன் விட்டு சென்றதாக கூறிவிட்டு இப்படி ஆடி, பாடி வீடியோ வெளியிடுவது சரியல்ல என்றும் கருத்துக்கள் வந்தன.


சென்னையில் கணவன், மனைவியை மாற்றிக்கொள்ளும் கலாசாரம்? ஈசிஆர் சாலை அட்டூழியம்

இந்தநிலையில் அப்பெண் டிக்டாக்கில் வேறொரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதை போன்ற வீடியோ பகிரப்பட்டதாக கூறி அவரை பின்தொடர்ந்தவர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். மேலும் அவருடைய தங்கையையும் விட்டுவைக்கவில்லை.

இதனால் தான் மன உளைச்சலில் இருப்பதாகவும், அதனால் நானும் என் தங்கையும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள போகிறோம் என கூறி புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி விமர்சனம் செய்த நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அடுத்த செய்தி